சென்னை, மார்ச் 14 முதலமைச்சர் துணை முதலமைச்சர் மற்றும் சிறீபெரும்புதூர் ஜீயர் குறித்து அவதூறு பரப் பியதாக கைதான திருச்சி ரங்கராஜன் நரசிம்மன் மீதான வழக்கை ரத்து செய்ய க்கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
திருச்சி சிறீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம் மன் ‘நமது கோயில்கள்’ என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் மற்றும் சிறீபெரும்புதூர் ஜீயர் குறித்து அவதூறாக பேசியதாக ரங்கராஜன் நரசிம்மனை சென்னை சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்த வழக்கில் அவருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந் நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ரங்கராஜன் நரசிம்மன் சென்னை உயர் நீதிமன் றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பாக நேற்று (மார்ச் 13) விசாரணைக்கு வந் தது. அப்போது இந்த வழக்கில் புலன் விசா ரணை நடைபெற்று வருவதால் வழக்கை ரத்து செய்யக்கூடாது என ஆட்சேபம் தெரி விக்கப்பட்டது. அப்போது ரங்கராஜன் நரசிம்மன், தன்னை பழி வாங்கும் நோக்குடன் அரசு இந்த வழக்கை பதிவு செய்திருப்பதாக சத்தம் போட்டு பேசினார். இதனால் கோபமடைந்த நீதிபதி, “இது ஒன்றும் சந்தையல்ல, நீதிமன்றம்” என கண்டிப்புடன் தெரி வித்தார்.
பின்னர் நீதிபதி, மனு தாரரான ரங்கராஜன் நரசிம்மன் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்து, அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த மனு மீது விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.