சென்னையில் தமிழில் பெயர்ப் பலகை இல்லாத கடைகளின் உரிமம் ரத்து சென்னை மாநகராட்சி முடிவு

2 Min Read

சென்னை, மார்ச் 13- சென்னையில் தமிழில் பெயர்ப் பலகை இல்லாத கடைகளின் உரிமங்களை தற்காலிக மாக ரத்து செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

தமிழில் பெயர்ப் பலகை

தொழில் நிறுவனங்கள், கடைகளின் பெயர்ப் பலகை தமிழில் பெரிதாக வைக்க வேண்டும். அதற்கு அடுத்த அளவில் ஆங்கிலத்திலும் அதற்கும் குறைந்த அளவில் விருப்பமுள்ள பிற மொழிகளில் வைக்க வேண்டும் என்பது விதிமுறையாகும். இதனை பெரும்பாலானவர்கள் பின்பற்றாமல் தமிழ் எழுத்துகளை சிறியதாகவும், ஆங்கிலம், ஹிந்தி போன்ற மொழிகளை பெரிதாக எழுதி உள்ள பலகைகள் சென்னையில் பல பகுதிகளில் காணப்படுகிறது. கடைகளின் பெயர் பலகையில் தமிழ் எழுத்துகள் சிறிய அளவில் போடப்பட்டும், பிற மொழிகளில் பெரிதாகவும் வைக்கப்பட்டு இருப்பது குறித்து புகார்கள் மாநகராட்சிக்கு வந்தன.
சென்னை மாநகராட்சியில் 70 ஆயிரம் கடைகள் உரிமம் பெற்று செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பாரிமுனை, சவுகார்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் தமிழில் பெயர் பலகை இல்லாமல் இருப்பது தெரிய வந்துள்ளது.

நடவடிக்கை

தமிழில் பெயர்ப் பலகை வைக்காத கடைகளுக்கு முதலில் விளக்கம் கேட்டு தாக்கீது கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. 7 நாட்களுக்குள் சரி செய்யவில்லை என்றால் அந்த கடைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்யலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தமிழில் பெயர் பலகை கட்டாயம் வைக்க வேண்டும் என்பதையும் அதை முறையாக பின்பற்றாத கடைகளின் மீது நடவடிக்கை எடுக்கவும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டு தமிழில் பெயர் பலகை வைக்க கடைகளுக்கு தாக்கீது வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுஉள்ளது.

சென்னை மாநகராட்சியில் இதற்கான கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. மாநகராட்சி கவுன்சிலர்களும் தங்கள் பகுதியில் உள்ள கடைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *