பக்தர்கள் எச்சில் இலையில் உருளுவதற்கு நீதிமன்றம் தடை!

1 Min Read

கரூர், மார்ச் 13 பக்தர்கள் எச்சில் இலையில் உருளுவதற்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை தடை விதித்துள்ளது.
கரூர் சதாசிவ பிரம்மேந்திரர் கோவிலில் பார்ப்பனர்கள் சாப்பிட்டு வைத்த எச்சில் இலையில் உருளுதல் என்கின்ற பழக்கம் மனித மாண்புக்கு எதிரானது என்றும், அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள தனிமனித உரிமைக்கும் எதிரானது என்றும், அதை தடை செய்ய வேண்டும் என்றும் வழக்குத் தொடுக்கப்பட்டதில், ‘‘காலம் காலமாக நடைபெற்று வருவதை நிறுத்த முடியாது’’ என்றும், ‘‘எச்சில் இலையில் அதுவும் ‘பிராமணர்கள்’ சாப்பிட்டு கீழே போட்ட எச்சில் இலையில் உருளுவது தவறல்ல’’ என்றும் மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பளித்தார்.

அந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசும், சமூக ஆர்வலர்களும் மேல்முறையீட்டு வழக்கினை தாக்கல் செய்தார்கள்.
அந்த வழக்கில் இன்று (13.3.2025) தீர்ப்பளித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் அருள் முருகன்ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘‘ஜி.ஆர்.சுவாமிமிநாதன் என்ற நீதிபதி அளித்த தீர்ப்பு செல்லாது’’ என்றும், ‘‘இது சம்பந்தமாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது இது போன்ற தீர்ப்புகள் வழங்கக் கூடாது’’ என்றும் குறிப்பிட்டு எச்சில் இலையில் உருளுவதற்குத் தடை விதித்துத் தீர்ப்பளித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *