கரூர், மார்ச் 13 பக்தர்கள் எச்சில் இலையில் உருளுவதற்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை தடை விதித்துள்ளது.
கரூர் சதாசிவ பிரம்மேந்திரர் கோவிலில் பார்ப்பனர்கள் சாப்பிட்டு வைத்த எச்சில் இலையில் உருளுதல் என்கின்ற பழக்கம் மனித மாண்புக்கு எதிரானது என்றும், அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள தனிமனித உரிமைக்கும் எதிரானது என்றும், அதை தடை செய்ய வேண்டும் என்றும் வழக்குத் தொடுக்கப்பட்டதில், ‘‘காலம் காலமாக நடைபெற்று வருவதை நிறுத்த முடியாது’’ என்றும், ‘‘எச்சில் இலையில் அதுவும் ‘பிராமணர்கள்’ சாப்பிட்டு கீழே போட்ட எச்சில் இலையில் உருளுவது தவறல்ல’’ என்றும் மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பளித்தார்.
அந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசும், சமூக ஆர்வலர்களும் மேல்முறையீட்டு வழக்கினை தாக்கல் செய்தார்கள்.
அந்த வழக்கில் இன்று (13.3.2025) தீர்ப்பளித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் அருள் முருகன்ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘‘ஜி.ஆர்.சுவாமிமிநாதன் என்ற நீதிபதி அளித்த தீர்ப்பு செல்லாது’’ என்றும், ‘‘இது சம்பந்தமாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது இது போன்ற தீர்ப்புகள் வழங்கக் கூடாது’’ என்றும் குறிப்பிட்டு எச்சில் இலையில் உருளுவதற்குத் தடை விதித்துத் தீர்ப்பளித்தனர்.