சென்னையில் நடைபாதைகளை வாகனங்கள் மூலம் தூய்மைப்படுத்தும் பணி மேயர் ஆர்.பிரியா தொடங்கி வைத்தார்

viduthalai
1 Min Read

சென்னை, மார்ச் 13 சென்னை மாநகராட்சி சார்பில் நடைபாதைகள் மற்றும் பேருந்து நிழற்குடைகளை 30 வாகனங்கள் மூலம் தூய்மைப்படுத்தும் பணியை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா நேற்று (12.3.2025) தொடங்கி வைத்தார்.

தூய்மைப் பணிகள்

இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாநகராட்சிப் பகுதிகளை தூய்மையாகப் பராமரிக்க அனைத்து போக்குவரத்து மற்றும் உட்புறச் சாலைகள், பேருந்து நிறுத் தங்கள், பூங்காக்கள், மயானங்கள், மேம்பாலங்கள், மேம்பாலங்களின் கீழ் உள்ள பகுதிகள் மற்றும் சுரங்கப் பாதைகளில் தீவிர தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, அனைத்து மண்டலங்களில் பேருந்து சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள 925 பேருந்து நிழற்குடைகள் மற்றும் 173 நடைபாதைகளை சுத்தம் செய்யும் பணிக்காக 30 வாகனங்கள் வாட கைக்கு எடுக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களின் சேவை தொடக்க விழா ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று (12.3.2025) நடைபெற்றது. இதில் மேயர் ஆர்.பிரியா பங்கேற்று கொடியசைத்து வாகனங்களை அனுப்பி வைத்தார்.

மறுசுழற்சி

முதற்கட்டமாக ஒரு மண்டலத் துக்கு தலா 2 வாகனங்கள் அனுப்பப் பட்டுள்ளன. இவற்றில் உயர் அழுத்த பம்புகள் மற்றும் தண்ணீர் தொட்டி பொருத்தப்பட்டுள்ளன. இந்த வாகனங்களில் சென்னை குடிநீர் வாரியத்தின் மறுசுழற்சி முறையில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் பயன் படுத்தப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் மு.மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுரு பரன், மாமன்ற ஆளுங்கட்சித் தலைவர் ந.ராமலிங்கம், நிலைக்குழுத் தலைவர் பொது (சுகாதாரம்) கோ.சாந்தகுமாரி, தலைமைப் பொறியாளர் (பொது) கே.விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *