‘தந்தை பெரியார் பிறவாமலிருந்தால்’ – தெருமுனைக் கூட்டம்

1 Min Read

கும்பகோணம் கழக மாவட்டம், திருவிடைமருதூர் ஒன்றியம், திருநறையூர் கிளைக் கழகம் சார்பாக 2.3.2025 அன்று மாலை 6.00 மணியளவில் குடந்தை மாநகர தலைவர் இரமேஷின் தாயார் சுயமரியாதைச் சுடரொளி மனோரஞ்சிதத்தின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் தெருமுனைக் கூட்டம் ‘தந்தை பெரியார் பிறவாமலிருந்தால்’ என்கிற தலைப்பில் கழகப் பேச்சாளர் பெரியார் செல்வம் பங்கேற்று சிறப்புரையாற்ற எழுச்சியுடன் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கு.நிம்மதி தலைமையேற்றார். மாவட்ட காப்பாளர் இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர் விஜயகுமார், வேலூர் மாவட்டத் தலைவர் எழிலரசன், ஒன்றிய செயலாளர் முருகேசன், குடந்தை மாநகர செயலாளர் சிவக்குமார், பாபநாசம் ஒன்றிய தலைவர் பூவானந்தம், குடந்தை ஒன்றிய தலைவர் மகாலிங்கம், செயலாளர் செல்வம், மாவட்ட மகளிர் அணி தலைவர் திரிபுரசுந்தரி, குடந்தை மாநகர மகளிரணி செயலாளர் அம்பிகா, மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் கண்ணன், துணைத் தலைவர் சிவக்குமார், துணைச் செயலாளர் சங்கர், மாவட்ட ப.க செயலாளர் சேதுராமன், ஒன்றிய துணைச் செயலாளர் குணா, மாவட்ட இளைஞரணி தலைவர் தமிழ்வேந்தன் ஆகியோர் பங்கேற்றனர். திருநறையூர் திமுக பொறுப்பாளர் பீட்டர் நன்றி கூறினார். பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *