சாக்கோட்டை கணபதி-ஏகாம்பாள் 39ஆவது நினைவு நாள்

1 Min Read

கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகனின் பெற்றோர் சுயமரியாதைச் சுடரொளிகள் சாக்கோட்டை கணபதி-ஏகாம்பாள் ஆகியோரது 39ஆவது நினைவு நாளையொட்டி உயர் கல்விதுறை அமைச்சர் கோவி. செழியன், மயிலாடுதுறை மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம், குடந்தை மாநகர துணை மேயர் சுப. தமிழழகன் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக, திராவிடர் கழக மாவட்ட, மாநகர, ஒன்றிய கழக நிர்வாகிகள் அவர்களது நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார்கள். குடும்பத்தாரின் சார்பில் சாக்கோட்டையில் கட்டப்பட்டிருந்த சுயமரியாதைச் சுடரொளிகள் “மானமிகு சாக்கோட்டை கணபதி – ஏகாம்பாள் நினைவுப் பேருந்து பயணிகள் நிழற்குடை”யை குடந்தை மாவட்ட தலைவர் கு.நிம்மதி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் குடந்தை மாநகர முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *