செய்திச் சுருக்கம்

1 Min Read

மழை வாய்ப்பு

வடதமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதின் கார ணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று (11.6.2023) முதல் 16ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மய்யம் தகவல்.

தன்னார்வலரை…

மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்ட விண்ணப்பங்களைப் பெற 500 பயனாளிகளுக்கு ஒரு தன்னார்வலரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதா கிருஷ்ணன் தகவல்.

சிறப்பு குழு

சென்னை கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் வழித்தடத்தில் பயணிகளின் பாதுகாப்புக்காக 10 காவ லர்கள் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது என ரயில்வே காவல் துறை கண்காணிப்பாளர் பொன் ராமு தகவல்.

பதிவு செய்ய…

சுற்றுலா தொழில் முனைவோர் தமிழ்நாடு சுற்றுலாத் துறையில் வரும் 31ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கண்காணிக்க…

ரயில் நிலைய அதிகாரி அறை, சிக்னல் முறைகளைக் கையாளும் அறை (பேனல், ரிலே அறை)களில் சிசிடிவி கேமராக்களை நிறுவி, காட்சிப் பதிவு பதிவு செய்ய ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

உதவித் தொகைக்கு…

மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு உதவித் தொகையை பெறhttps://www.tnesevai.tn.gov.in/ citizen/Registration.aspx என்ற இணையதள முகவரி மூலமாகவோ அல்லது இ-சேவை மய்யங்களுக்குச் சென்று விண்ணப்பிக்கலாம். மாற்றுத் திறனாளிகள் இச்சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பரிசோதனை

பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில் இருவிரல் பரிசோதனை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *