காய்கறி விலை உயர்வு: நடமாடும் அங்காடிகள் மூலம் கட்டுப்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் ஆணை

Viduthalai
3 Min Read

அரசு, தமிழ்நாடு

சென்னை, ஜூலை 11 – அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரி களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது காய்கறி விலையை கட்டுப் படுத்த, நடமாடும் அங்காடிகள் மூலம் காய்கறிகள் விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.

தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரித்து உள் ளது. குறிப்பாக தக்காளி விலை கிலோ 150 ரூபாயை தாண்டி விற்கிறது. டில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் நேற்று (10.7.2023) ஒரு கிலோ தக்காளி ரூ.200 வரை விற்கப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (10.7.2023) அத்தியாவசிய பொருட்க ளின் விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆய்வு கூட்டம் நடை பெற்றது. கூட்டத்தின் தொடக்கத்தில் முதலமைச்சர்மு.க. ஸ்டாலின் பேசிய தாவது:

கடந்த சில வாரங்களாக சில குறிப் பிட்ட வகை மளிகை பொருட்கள் மற் றும் காய்கறிகளின் விலை நிலவரத்தை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினேன். 

அதைத் தொடர்ந்து, கூட்டுறவுத் துறை சார்பாக தக்காளி விலையை கட்டுப்படுத்த சிறப்பு விற்பனை தொடங்கப்பட்டு உள்ளது. இதை மேலும் விரிவுபடுத்த வேண்டும். இது தொடர்பாக அரசின் பல்வேறு துறை யைச் சார்ந்த அலுவலர்கள், காய்கறி உள்ளிட்ட குறிப்பிட்ட வகை மளிகை பொருட்கள், அனைத்து கூட்டுறவு சங்க அங்காடிகளிலும், நியாய விலைக் கடைகளிலும் சந்தை விலையைவிட குறைவாக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

தேவைப்பட்டால் இதற்காக தமிழ் நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் மேற்கொள்ளலாம். அதே சமயம், அத்தியாவசிய பொருட்கள் பதுக்கப்படுவதை கடுமையாக கண் காணித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை இதில் கூடுதல் கவனம் செலுத்தி, அத்தியாவசியப் பொருட்கள் சட்டத் தின் கீழ் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள உழவர் சந்தைகளில் காய்கறிகளின் விற்ப னையை அதிகப்படுத்த வேளாண்துறை அலுவலர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும். கரோனா காலத்தில் செயல் படுத்தப்பட்டது போல நடமாடும் காய் கறி அங்காடிகளை தற்போதும் தேவைப்படும் இடங்களில் மாநகராட்சி மற்றும் தோட்டக்கலை துறை மூலம் தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டுறவு பல்பொருள் அங்காடிகள்

அதைத்தொடர்ந்து இந்த ஆய்வு கூட்டத்தில் பேசிய கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அதிகாரிகளும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அலுவலர்களும் மாநிலம் முழுவதும் செயல்படும் பண்ணை பசுமை அங்காடிகள் மூலம் கூடுதலாக தக்காளி, சின்ன வெங்காயம் ஆகியவை கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும். வெளிச்சந்தை விலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக கூட்டுறவு பல்பொருள் அங்காடிகள் மூலம் துவரம் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு போன்றவை சந்தை விலை யைவிட குறைவான விலையில் விற் பனை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

300 நியாய விலைக் கடைகள் மூலம் தக்காளி விற்பனை விரிவுபடுத்தப்படும். நடமாடும் காய்கறி அங்காடிகள் வாயி லாக நகரப்பகுதிகளில் காய்கறிகள் விற் பனை மேற்கொள்ளப்படும். மாநிலம் முழுவதும் செயல்படும் உழவர் சந்தை களில் விவசாயிகள் மற்றும் நுகர் வோர்கள் பயன்பெறும் வகையில் தக் காளி, சிறிய வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் அதிக அளவில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். 

துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு இருப்பு விவரங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பதுக்கல் செய்வோர் மீது அத்தியாவசிய பண்டங்கள் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

கூட்டத்தில் வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன் னீர்செல்வம், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் செயலாளர் சமய மூர்த்தி, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செய லாளர் ஜெகநாதன், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாது காப்பு ஆணையர் ராஜாராமன், வேளாண்மை ஆணையர் சுப்பிர மணியன், கூட்டுறவு சங்கங்களின் பதி வாளர் சுப்பையன், வேளாண்மை விற் பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குனர் நடராஜன், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குனர் அண்ணாதுரை, தோட்டக் கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் பிருந்தா தேவி, குடிமைப் பொருள் வழங்கல் (குற்றப் புலனாய்வுத் துறை) காவல்துறை தலைவர் காமினி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *