மக்களுக்கு எளிதான வழி கிராம நத்தம் நில ஆவணங்கள்… புதிய கணக்கெடுப்பு!

2 Min Read

சென்னை, மார்ச் 11- தமிழ்நாட்டில், 2000ஆம் ஆண்டுக்கு பிறகு வழங்கப்படும், பட்டா, நில அளவை வரைபடம் உள்ளிட்ட ஆவணங்கள், இணைய முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. தமிழ் நிலம் என்ற தகவல் தொகுப்பில், இந்த ஆவணங்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. எனவே, நில ஆவணங்களை, ஆன்லைன் மூலமே எளிதாக பார்க்கலாம், பிரதியும் எடுக்கலாம்.

கிராம நத்தம்

எனினும், கிராம நத்தம் உள்ளிட்ட சிலவகை நிலங்களுக்கு வழங்கப்பட்ட பட்டாக்கள், இன்னும், காந்த (மேனுவல்) முறையிலேயே இருப்பதால், தேவையற்ற குழப்பம் ஏற்படுவதால், இந்த ஆவணங்களையும் இணைய முறைக்கு மாற்ற, தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு உத்தரவிட்டது. ஆன்லைன் முறையில், பட்டாவை பார்க்கும் இணையதளத்தில், நத்தம் நிலங்களுக்கு தனி வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
கிராமங்களில் நத்தம் என வகைப்படுத்தப்பட்ட குடியிருப்பு களுக்கு உடனடியாக பட்டா வழங்கப்படவில்லை என்பதால்தான், ஒரு நிமிட பட்டா திட்டத்தை நம்முடைய அரசு விரிவாக்கம் செய்திருக்கிறது. இதற்காக பத்திரப்பதிவுத்துறை சர்வரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது..

பட்டா மாற்றம்

இதன்மூலம், கிராமங்களில் உள்ள வீடுகளை பத்திரப்பதிவு செய்யும்போதே பட்டா பெயர் மாற்றம் செய்யப்படும் .. அதேபோல, உட்பிரிவு செய்ய தேவையில்லாத நிலங்களை பத்திரப்பதிவு செய்யும்போதே உடனடியாக பட்டா மாற்றம் செய்யப்படும்.

எனினும், சில குறிப்பிட்ட வகை நிலங்களின் பட்டா விபரங்கள், இணைய முறைக்கு மாறாமல் உள்ளன. பெரும்பாலான கிராமங்களில், நத்தம் நிலங்களுக்கான சர்வே எண்கள் தனியாகவும், வழக்கமான பட்டா நிலங்களுக்கான சர்வே எண்கள் தனியாகவும் பராமரிக்கப்பட்டு வந்தன.
குழப்பம் தவிர்க்க நடவடிக்கை

ஆனால், இணைய முறைக்கு மாறும்போது, ஒரே வரிசையில் சர்வே எண்கள் ஒதுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்காகவே குழப்பம் ஏற்படும் நத்தம் நிலத்துக்கு மட்டும், புதிய சர்வே எண் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
இது குறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் தரப்பில் சொல்லும்போது, உதாரணத்துக்கு, கிராம நத்தம் நிலத்துக்கு, 127 என்ற சர்வே எண், மேனுவல் ஆவணத்தில் இருக்கும்போது, அதே கிராமத்தில் வழக்கமான பட்டா நிலத்துக்கும், 127 என்ற சர்வே எண் இருக்கலாம்.. இந்த குழப்பத்தை தவிர்க்க, நத்தம் நில ஆவணங்களை, ஆன்லைன் முறைக்கு மாற்றும்போது, கிராம அளவில் அனைத்து நிலங்களுக்கும், தனித்தனி சர்வே எண்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

நில ஆவணங்கள் –
புதிய சர்வே நம்பர்

மேலும், குழப்பம் ஏற்படும் நத்தம் நிலத்துக்கு மட்டும், புதிய சர்வே எண் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த குறிப்பிட்ட கிராமத்தில், புழக்கத்தில் உள்ள இறுதி சர்வே எண்ணுக்கு, அடுத்த எண்களாக புதிய சர்வே எண்கள் ஒதுக்கப்படும்.
இதற்கு தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வழிகாட்டுதல்களும் வழங்கப் பட்டுள்ளதால், சர்வே எண் குழப்பம் தீர்வதுடன், அனைத்து நில ஆவணங்களையும், ஆன்லைன் முறையில் எளிதாக பார்க்க முடியும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *