சென்னை, மார்ச் 11- செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் “செந்தமிழ் நாட்டு தமிழச்சியே” என்ற தலைப்பில் போட்டிகள் நடத்தப்படவுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
பெண்களுக்கு அதிகாரம்
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் தலைமையிலான நான்கு ஆண்டு கால ஆட்சியில் சமூக நீதி, சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் ஆகியவற்றை பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் வழங்கியதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.
அதன்படி தமிழ்நாட்டில் செயல் படுத்தப்பட்டு வரும் பெண்களுக்கான திட்டங்களைப் போற்றும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சமூக ஊடகமையம் சார்பில் “செந்தமிழ் நாட்டு தமிழச்சியே” என்ற தலைப்பில் பல்வேறு சமூக ஊடகங்களின் (X, Instagram, Facebook, WhatsApp, YouTube) வாயிலாக போட்டிகள் நடத்தப்படவுள்ளது.
இப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் நேரில் சந்தித்து பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி சிறப்பிக்கவுள்ளார்.
முதல்-அமைச்சர், பெண்களுக்கான பல்வேறு மகத்தான நலத்திட்டங்கள் வாயிலாகத் தமிழ்நாட்டுப் பெண்களின் வாழ்க்கையில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார்.
வாழ்க்கை மாற்றம்
விடியல் பயணத் திட்டம் மூலம் அரசின் விடியல் பயண பேருந்துகளில் இதுவரை 642 கோடியே 55 லட்சம் முறை மகளிர் கட்டணமில்லா விடியல் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதன் மூலம் ஒவ்வொரு பெண் பயணியும் மாதம் சராசரியாக ரூ.888 வரை சேமிக்கின்றனர்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் மூலம் மாதந்தோறும் ரூ.1,000 வீதம் 1 கோடியே 15 லட்சம் மகளிர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் பெண்களின் வாழ்க்கையை வளம் மிக்கதாக மாற்றியமைத்துள்ளது.
போட்டிகள்
புதுமைப் பெண் திட்டத்தில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் தமிழ் வழிப் பள்ளிகளில் பயின்று, தடையின்றி உயர் கல்வி பயிலும் 4 லட்சத்து 97 ஆயிரத்து 525 மாணவிகளுக்கு மாதந்தோறும்
ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு கடந்த நான்கு ஆண்டு கால ஆட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு பெண்கள் நலத்திட்டங்களின் மூலமும், பெண்களைப் போற்றும் விதமாகவும் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சமூக ஊடகமையம் சார்பில் “செந்தமிழ் நாட்டு தமிழச்சியே” என்ற தலைப்பில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
அதன்படி உங்கள் கருத்து மதிப்பு மிக்கது (Your Voice Matters), Selfie with the Superwoman, ரீல்ஸ் போட்டி (Reels Competition), கட்டுரைப் போட்டி, வரைதல்/ஓவியப்போட்டி (Painting/Drawing Competition) ஆகிய 5 பிரிவுகளில் போட்டிகள் நடத்தபடவுள்ளது.
போட்டிகளும் – அதன் விதிமுறைகளும் பின் வருமாறு:-
1. உங்கள் கருத்து மதிப்புமிக்கது our Voice Matters) உங்களைப் பெரிதும் கவர்ந்த பெண்களுக்கான திட்டம் எது? உங்களது மதிப்புமிக்க கருத்துக்களைக் கீழ்க்காணும் link-ஐ பயன்படுத்தி தெரிவிக்கவும்.
2. சுயமிப் போட்டி (Selfie with the Superwoman)
போட்டியாளர்கள் தங்கள் வாழ்க்கையில் மிகுந்த ஊக்கம் மற்றும் தாக்கத்தை ஏற்படுத்திய பெண்கள் என்பதை விளக்கும் வகையில் ஒரு வாசகத்துடன் கூடிய சுயமியை (Selfie) தங்களின் சமூக ஊடகக் கணக்குகளிலிருந்து #செந்தமிழ் நாட்டு தமிழச்சியே #TNCelebratesHer மற்றும் #TNWomen என்ற ஹாஷ்டாக்குகளை பயன்படுத்தி @tndipr-யை TAG செய்து பகிரவும்.
3. ரீல்ஸ் போட்டி (Reels Competition)
முதலமைச்சர் வெளியிட்ட “செந்தமிழ் நாட்டு தமிழச்சியே” பாடலுக்கான தங்களின் ஹூக் ஸ்டெப்பை (Hook Step) உருவாக்கி, தங்களது சமூக ஊடகக் கணக்குகளிலிருந்து #செந்தமிழ் நாட்டு தமிழச்சியே #TNCelebratesHer மற்றும் #TNWomen என்ற ஹாஷ்டாக்குகளை பயன்படுத்தி @tndipr-யை TAG செய்து பகிரவும். ரீல்ஸ் 1 நிமிடத்துக்குள் அமைய வேண்டும்.
வீடியோ மற்றும் ஆடியோ சரியான தரத்துடன் இருக்க வேண்டும். செந்தமிழ் நாட்டு தமிழச்சி பாடல்
4. கட்டுரைப் போட்டி(Essay Competition)
1. மகளிர் மேம்பாட்டில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு ஏன் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது?
2. கடந்த 4 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட பெண்கள் நலத் திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகள் பற்றி
3. கடந்த 4 ஆண்டுகளில் பெண்கள் நலத் திட்டங்கள் மூலம் பயனடைந்தவர்கள் – அவர்களின் வாழ்க்கை அல்லது அன்றாட வாழ்வாதாரத்தில் எவ்வாறு மாற்றம் அடைத்திருக்கிறீர்கள் என்பதைப் பற்றி மூன்று தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் 3 பக்க அளவில் கட்டுரைகள் அமைதல் வேண்டும். கட்டுரைகளைத் எழுதி PDF கோப்பாக அனுப்ப வேண்டும்.
5. வரைதல் / ஓவியப் போட்டி (Painting/Drawing Competition)
தலைப்பு : பெண்களை போற்றுவோம்
பெண்களைக் கவுரவித்து கொண்டாடும் வகையில் வரைதல்/ஓவியங்கள் அமைதல் வேண்டும். ஓவியங்களைத் தெளிவான முறையில் ஒளிப்படம் எடுத்து அனுப்ப வேண்டும்.
மேற்கண்டவாறு நடத்தப்படும் போட்டிகளில் பங்கேற்கும் போட்டியாளர்கள் தங்கள் படைப்புகளை [email protected] என்ற மின்னஞ்சலில் அனுப்பி வைக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.