தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (10.3.2025) முகாம் அலுவலகத்தில், பத்மசிறீ விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பறை இசை கலைஞர் ஆர்.வேல்முருகனுக்கு (வேலு ஆசான்) பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்து, முதலமைச்சரின் பிறந்தநாளையொட்டி கொளத்தூரில் நடைபெற்ற நமது பண்பாட்டுக் கலைகளை கொண்டாடும் விழாவில் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சியை நடத்தியமைக்காக சிறப்பு செய்தார். உடன் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா.