மக்கள் நல பிரச்சினைக்கு குரல் கொடுக்காதவர்கள் புதிதாக கட்சி தொடங்கியதும் முதலமைச்சராக ஆசை வைகோ குற்றச்சாட்டு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மார்ச் 10- மதிமுக சார்பில் மகளிர் நாள் கொண்டாட்டம் சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் 8.3.2025 அன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமை வகித்தார். பெண் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து, வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:திராவிடத்திற்கு ஆபத்தாக தற்போதைய இந்துத்துவா சக்திகளை பாஜ வளர்த்து வருகிறது. எனவேதான் திராவிடத்தை காப்பதற்காக மதிமுக என்றென்றும் திமுகவோடு துணை நிற்கும்.

இமயமலையை கூட நகர்த்தி விடலாம், ஆனால் திமுகவை என்றும் அழித்து விட முடியாது. புதியதாக கட்சியை தொடங்கியவர்கள் முல்லைப் பெரியாறு, நியூட்ரினோ, ஸ்டெர்லைட், நெய்வேலி நிலக்கரி சுரங்கம் போன்ற மக்கள் நல பிரச்சினைகள் ஏதாவது ஒன்றுக்காவது குரல் கொடுத்தது உண்டா? இப்படிப்பட்டவர் எடுத்த எடுப்பிலேயே முதலமைச்சர் ஆகிவிட வேண்டும் என பேசி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
இதில், வைகோ மனைவி ரேணுகா தேவி, மகளிர் அணி மாநில செயலாளர் மல்லிகா தயாளன், முதன்மை செயலாளர் துரை வைகோ, துணை பொது செயலாளர்கள் மல்லை சத்யா, டாக்டர் ரொகையா, அமைப்புச் செயலாளர் வந்திய தேவன், மாவட்ட செயலாளர்கள் கே.கழகக்குமார், சைதை சுப்ரமணியன், மாவை மகேந்திரன், டி.சி.ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *