10.3.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* மணிப்பூரில் மீண்டும் வெடித்தது வன்முறை; குக்கி மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் மக்கள் ஆர்ப்பாட்டம். காவல்துறை சுட்டதால் ஒருவர் படுகொலை, 40 பேர் படுகாயம்.
* நாடாளுமன்றத்தில் எச்சரிக்கையோடு வாதத்தை முன்வைக்க வேண்டும் ஹிந்தித் திணிப்பைத் தான் எதிர்க்கிறோம் மொழியையோ, மக்களையோ அல்ல: திமுக எம்பிக்கள் கூட்டத்தில் முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
* அனல் பறக்கும் அரசியல் சூழலில் பட்ஜெட் 2ஆம் கட்ட கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்: தொகுதி மறுசீரமைப்பு, வாக்காளர் பட்டியலில் முறைகேடு, டிரம்பின் வரி மிரட்டல் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* “நமது ஆறுகள் அனைத்தும் மாசுபட்டுள்ளன. மேலும் நான் ஒருபோதும் கங்கை நதியில் குளிக்க மாட்டேன். மூட நம்பிக்கைகளிலிருந்து நாம் வெளியே வர வேண்டும் என மகாராட்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே பேச்சு.
தி இந்து:
* ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பின் கனடாவின் புதிய பிரதமராகும் மார்க் கார்னி. லிபரல் கட்சியின் தலைவராக தேர்வு. இவர் 2008 முதல் 2013 ஆம் ஆண்டு வரை கனடா வங்கியின் எட்டாவது ஆளுநராக பணியாற்றியுள்ளார். நிதி நிலைத்தன்மை வாரியத்தின் தலைவராகவும் 2011 முதல் 2018 வரை பணியாற்றியுள்ளார்.
* தொகுதி மறுவரையறை பிரச்சினை: ஆதரவு திரட்டுவதற்காக ஏழு மாநிலங்களுக்கு திமுக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
* நிதிசுடன் மீண்டும் கூட்டணி வைக்க மாட்டேன் அரசு வேலைகளில் 65 சதவிகித இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்துவோம், ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஸ்வி அறிவிப்பு.
* நீட் தேர்ச்சியின் லட்சணம்:தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், பல மாண வர்களின் அறிவு குறைவாகவே உள்ளது கண்டறி யப்பட்டுள்ளதால், நீட் தேர்வு மய்யங்களில் பாதுகாப்பை அதிகரிக்கவும், தேர்வர்களின் பயோமெட்ரிக்ஸை சரிபார்ப்பது உட்பட, அசாம் அரசு ஒன்றிய அரசை வலியுறுத்தும் என்று முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
தி டெலிகிராப்:
* மும்பை நகரத்தை அதானி குழுமத்திற்கு தாரை வார்க்கிறது பாஜக தலைமையிலான மகாராட்டிரா அரசு, சிவசேனா (UBT) தலைவர் ஆதித்ய தாக்கரே கண்டனம்.
* ‘கலிபோர்னியாவின் சினோ ஹில்ஸில் உள்ள ஒரு ஹிந்து கோவிலை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, மோடி அரசு அமெரிக்காவுக்கு கோரிக்கையாம்.
.- குடந்தை கருணா