திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் தொண்டறத்தாய் அன்னை மணியம்மையாரின் 106ஆவது ஆண்டு பிறந்த நாளான இன்று (10.03.2025) காலை 9 மணியளவில் அன்னையார் அவர்களின் உருவப்படத்திற்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை மாலை அணிவித்து அம்மா அவர்களின் தொண்டறப்பணிகள் குறித்து பணியாளர்கள் மத்தியில் உரை யாற்றினார். இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி, பேராசிரியர்கள் மற்றும் பணித்தோழர்கள் கலந்து கொண்டு அன்னை மணியம் மையாருக்கு வீரவணக்கத்தை தெரிவித்துக் கொண்டனர்.