சேலம்
நாள் : 10.3.2025 திங்கள்கிழமை காலை 10:30 மணி
இடம்: தந்தை பெரியார் சிலை அருகில், சேலம்
தலைமை: வீரமணி ராஜு, மாவட்டத் தலைவர்
முன்னிலை : கி. ஜவகர், கழகக் காப்பாளர்
அன்னை மணியம்மையார் அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, அம்மா அவர்களின் பிறந்தநாள் கொண்டாடப்படும்.
திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக கழக, மகளிரணி, மகளிர் பாசறை, இளைஞரணி, மாணவர் கழக, தொழிலாளரணி தோழர்கள் குறித்த நேரத்தில் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
இப்படிக்கு, வீரமணி ராஜு ( மாவட்டத் தலைவர்), சி. பூபதி (மாவட்டச் செயலாளர்)
சேலம் மாவட்ட திராவிடர் கழகம்.
– – – – –
நாகர்கோவில்
நாள்:10.3.2025 திங்கள் மாலை 5.30 மணி
இடம்: பெரியார் மய்யம்,
ஒழுகினசேரி, நாகர்கோவில்.
தலைமை: மா.மு. சுப்பிரமணியம்
மாவட்டத் தலைவர்
முன்னிலை: கோ.வெற்றி வேந்தன்
மாவட்டச் செயலாளர்
தொண்டறத்தாய் அன்னையார் படத்திற்கு குமரிமாவட்ட திராவிடர்கழகம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளதால் தோழர்கள், பெரியார் பற்றாளர்கள் அவசியம் கலந்துகொள்ள வேண்டுகிறோம்.
இங்ஙனம்: குமரி மாவட்ட திராவிடர் கழகம்
– – – – –
திருவாரூர்
திருவாரூர் பழைய பேருந்து நிலையம்
பெரியார் சிலை அருகில்
10.3.2025 காலை 10 மணி
தலைமை சு.பிரியா நகர மகளிரணி தலைவர்
முன்னிலை: செ.சர்மிளா நகர மகளிரணி செயலாளர். கோ. செந்தமிழ்ச்செல்வி
இவண்: வீ.மோகன்
மாநில விவசாய தொழிலாளர் செயலாளர்
சவு.சுரேஷ் மாவட்ட செயலாளர்
கி அருண் காந்தி மாவட்டத் துணைத் தலைவர்
ப.ஆறுமுகம் நகரச் செயலாளர்.
– – – – –
மயிலாடுதுறை
நாள்- 11-03-2025 செவ்வாய்க்கிழமை
மாலை 5-00 மணி
இடம் – பெரியார் படிப்பகம், மயிலாடுதுறை.
கூட்ட விளக்க உரை
இரா. ஜெயக்குமார்
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்
கூட்டப் பொருள் 1. சிதம்பரம் நகரில் நடைபெற்ற கழக பொதுக்குழுத் தீர்மானங்களை நிறைவேற்றல் 2. விடுதலை சந்தா 3. பெரியார் உலகம் 4. பிரச்சாரத் திட்டம்.
திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக அனைத்து பொறுப்பாளர்களும், தோழர்களும் தவறாது பங்கேற்க வேண்டுகிறோம்.