நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு பிரச்சினை : ஒன்றிய அரசை கண்டித்து வரும் 12ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டங்கள்

Viduthalai
1 Min Read

சென்னை, மார்ச் 9- தொகுதி மறுசீரமைப்பு, ஹிந்தி திணிப்பைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12 ஆம் தேதி கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது.

திருவள்ளூரில் நடைபெறும் கண்டனப் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார்.
திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தொகுதி மறுசீரமைப்பு, ஹிந்தி திணிப்பைக் கண்டித்து ஒன்றிய அரசின் செயல்களை மக்களிடம் எடுத்து கூறும் விதமாக “தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும்” என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் மார்ச் 12 ஆம் தேதி ஒன்றிய அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் திருவள்ளூரில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகிறார்.
அதேபோல், குடியாத்தத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்கிறார். திருச்சி பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு, திண்டுக்கல் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் இ.பெரியசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

மேலும் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் கண்டனப் பொதுக்கூட்டங்களில் பங்கேற்க உள்ளவர்களின் பட்டியலை திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *