மேம்பட்ட சமூகத்தின் வளர்ச்சி பெண் விடுதலையில் இருந்தே தொடங்குகிறது  : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Viduthalai
1 Min Read

சென்னை, மார்ச் 9- பன்னாட்டு மகளிர் நாளையொட்டி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: சமூகத்தில் சரி பாதி இருக்கின்ற மகளிர் அனைவருக்கும் என் இனிய உலக மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேம்பட்ட சமூகத்தின் வளர்ச்சி பெண் விடுதலையில் இருந்தே தொடங்குகிறது. கல்வி-பண்பாடு-கலாசாரம்-பொருளாதாரம் என பல்வேறு தளங்களில் மகளிரின் தற்சார்பையும்-சுதந்திரத்தையும் உறுதி செய்வதே திராவிட இயக்கத்தின் லட்சியம்.
அதனை, பெரியார்-அண்ணா-கலைஞர் வழியில், மகளிர் விடியல் பயணம்-புதுமைப்பெண் – கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் போன்ற மகளிர் நல திட்டங்கள் மூலம் நம் முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார்கள். மகளிர் ஏற்றத்துக்கு என்றும் அயராது உழைத்திடுவோம். மகளிர் உரிமைகளை நிலைநாட்டிடுவோம்.இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *