வல்லம். மார்ச் 9- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில்) விளையாட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாக மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. விளையாட்டு விழா நிகழ்ச்சியில் பல்கலைக்கழக விளையாட்டு துறைத்தலைவர் பேரா டி.ரமேஷ் அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர் டாக்டர்என்.அண்ணாவி, (ரயில்வே முன்பதிவு மேற்பார்வையாளர் திருச்சி மற்றும் பன்னாட்டு தடகள வீரர் மற்றும் பயிற்சியாளர்) உரையாற்றும் போது மாணவர்கள் அணிவகுப்பு சிறப்பு துவக்கமாக இருந்தது என்றும் அணிவகுப்பில் கலந்து கொண்ட மாணவச்செல்வங்களை பாராட்டினார்.
படிப்பு முக்கியம் அதனைவிட விளையாட்டு முக்கியம் உடல் திறன் இருந்தால் தான் சிறப்பாக செயல்பட முடியும் என்று கூறினார். ஆண்டிற்கு பத்தாயிரம் பேருக்கு விளையாட்டு துறைக்கான இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
இதில் ரயில்வே துறைக்கான பணியிடங்களில் 3500 பேருக்கும், இராணுவம், வங்கி மற்றும் விமானபடை, கடற்படை மேலும் ஒன்றிய மாநில அரசால் விளையாட்டு துறைக்கு தனி இடஒதுக்கீடு விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்படுகிறது என்றார்.
தேசிய அளவில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் வென்ற விைளாட்டு வென்ற விளையாட்டு ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது என்றும் ஏழாம் வகுப்பு பயிலும் மாணவர் விளையாட்டில் திறமையாக செயல்பட்டால் தமிழ்நாடு மேம்பாட்டுதுறையால் உதவித் தொகை வழங்கி சிறப்பிக்கப்படுகிறது என்றார்.
பல்கலைக்கழக பதிவாளர் பேரா பி.கே.சிறீவித்யா அவர்கள் உரையாற்றும் போது மேலும் இந்த ஆண்டிற்கான விளையாட்டு போட்டியில் நமது மாணவர்கள் கலந்துகொண்டு வென்றுள்ளனர்.
மாணவர்கள் படிப்பில் மட்டுமல்லாமல் உடற்கூறு தகுதிகளையும் பெற்றிருக்க வேண்டும் என்று கூறியதோடு பன்னாட்டு மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார். இறுதியாக மாணவர் விளையாட்டு துறை செயலாளர் மகாலெட்சுமி நன்றி கூறினார்.
பரிசளிப்பு விழாவில் துணைவேந்தர், இணைதுணை வேந்தர் பதிவாளர், முதன்மையர்கள், இயக்குநர்கள், துறைத்தலைவர்கள், மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இவ்விளையாட்டுப் போட்டியில் அன்னை மணியம்மையார் அணியானது ஒட்டு மொத்த வாகையர் பட்டத்தை (சேம்பியன்சிப்பினை) வென்றனர். விளையாட்டு போட்டியை ஒருங்கிணைத்து நடத்திய விளையாட்டுத் துறை ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கப் பட்டது.