மதுரை, ஜூலை 11 – நெல்லை சங்கர் நகரைச் சேர்ந்த லயோலா செல்வகுமார் மதுரை உயர்நீதி மன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தார். அதில் கூறியதாவது எனக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். எனக்கும், என் மனை விக்கும் இடையே கருத்து வேறு பாடு காரணமாக நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடரப் பட்டு, நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ஷெரோன்நிஷா என்ப வருக்கும், அவரது மகனுக்கும் மாதம் தலா ரூ.10 ஆயிரம் பரா மரிப்பு செலவு தொகையாக வழங்க வேண்டும் என கடந்த 2021-ஆம் ஆண்டில் நெல்லை மாவட்ட குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.
ஷெரோன்நிஷாவுக்கும், எனக் கும் திருமணம் நடக்கவில்லை. அவருடன் எனக்கு தொடர்பு கிடையாது. நான் மாதம் ரூ.16 ஆயி ரம்தான் ஊதியம் பெறுகிறேன். பிடித்தம் போக ரூ.11,500 தான் கிடைக்கும். அதில் முதல் மனைவிக் கும், குழந்தைக்கும் மாதம் ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டி உள்ளது. எனவே ஷெரோன்நிஷாவுக்கும் அவரது மகனுக்கும் பராமரிப்புத் தொகை வழங்கும்படி கீழமை நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவை மறு சீராய்வு செய்ய வேண்டும். இவ் வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி முரளி சங்கர் முன்பு விசாரணைக்கு வந் தது. முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:
மனுதாரர் தன்னுடைய முதல் மனைவியிடம் இருந்து இன்னும் சட்டப்படி விவாகரத்து பெற வில்லை என்கிறார். இதனால் ஷெரோன் நிஷாவுடன் திருமணம் நடந்திருந்தால், அது சட்டபூர்வ மானது ஆகாது. அதே நேரத்தில் மனுதாரருக்கும், ஷெரோன் நிஷா வுக்கும் திருமணம் நடந்ததற்கான ஆதாரமாக திருமண அழைப்பிதழ், ஒளிப்படங்கள் உள்ளிட்டவை தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அவை அனைத்தும் சித்தரிக்கப் பட்டவை என்று மனுதாரர் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த திரு மண ஒளிப்படங்கள் சித்தரிக்கப் பட்டவை என்று மனுதாரர் கீழ் நீதிமன்றத்தில் தெரிவிக்கவில்லை.
மேலும் அவர், மாதம் ரூ.16 ஆயிரம் ஊதியம் பெறுவதாக கூறியுள்ளார். அதற்கான சான்றி தழை தாக்கல் செய்யவில்லை. எனவே இவர்களுக் குள் நடந்தது சட்டப்படியான திருமணமாக இல்லாவிட்டாலும், குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 125-இன் கீழ் பராமரிப்பு தொகை பெற மனைவிக்கு உரிமை உண்டு.
இதனால் மனுதாரர் சம்பந் தமான கீழமை நீதிமன்றம் உத்தர வில் தலையிட முடியாது. எனவே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப் படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.