தமிழ்நாடு அரசின் ‘மழை பாதிப்பு முன்னெச்சரிக்கை’ நடவடிக்கைகள் நிவாரண முகாம்கள் முதல் அவசரகால மய்யங்கள்

Viduthalai
5 Min Read

அரசு, தமிழ்நாடு

சென்னை, நவ. 15- மழை பாதிப்புக் குள்ளாகும் மக்களை முன் கூட்டியே நிவாரண முகாம் களில் தங்க வைக்கவும், நிவா ரண முகாம்களில் பாதுகாக்கப் பட்ட குடிநீர், மருத்துவ வசதி, மின்சாரம் மற்றும் இதர அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும், மனித உயிரிழப்பு, கால்நடை இறப்பு மற்றும் சேத மடைந்த குடிசை, வீடுகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங் கவும் மாவட்ட ஆட்சியர்க ளுக்கு தமிழ்நாடு அரசு அறி வுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக தமிழ் நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

அமைச்சர் ஆய்வு

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள் ளது. பல்வேறு மாவட்டங்களில் கனமழை, முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக் கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மாவட்ட அவசரகால செயல் பாட்டு மய்யத்தில் நேற்று (14.11.2023) ஆய்வு மேற்கொண் டார்.

வடகிழக்கு பருவமழை அக்.21 அன்று தொடங்கியதிலிருந்து, தமிழ்நாட்டின் பல் வேறு மாவட்டங்களில் பரவ லாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில், அக்.1 முதல் நவ.13ஆம் தேதி வரை 221.7 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மழையளவைக் காட்டிலும் 17 விழுக்காடு குறைவு ஆகும். வடகிழக்கு பரு வமழைக் காலத்தில் நவ.13 முடிய, 8 மாவட்டங்களில் அதிக மழைப்பொழிவும், 7 மாவட்டங்களில் இயல்பான மழைப்பொழிவும், 23 மாவட் டங்களில் குறைவான மழைப் பொழிவும், ஏற்பட்டுள்ளது.

நேற்று (நவ.14) காலை 8.30 மணி வரை 35 மாவட்டங்களில் 13.25 மி.மீ. மழை பெய்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 11.3 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. 5 இடங்களில் மிக கனமழையும், 30 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 19.09.2023 அன்று ஆய்வுக் கூட்டம் நடத்தி, வடகிழக்குப் பருவமழைக்கென மேற்கொள் ளப்பட வேண்டிய முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அரசு அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கினார்.

இந்திய வானிலை ஆய்வு மய்யத்தின் 13.11.2023ஆம் நாளிட்ட அறிவிக்கையில் பல் வேறு மாவட்டங்களில் கன மழை மற்றும் மிக கனமழை ஏற்பட கூடுமென்று தெரிவிக் கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுரையின் பேரில் பின் வரும் முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள 27 மாவட்டங்களில் தக்க முன் னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு கூடுதல் தலைமைச் செயலர், வருவாய் நிருவாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையரின் 13.11.2023 நாளிட்ட கடிதம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள் ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக, அரியலூர், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடு துறை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடு முறை அளிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத் தில் பள்ளிகளுக்கும், திண்டுக் கல் மாவட்டத்தில் கொடைக் கானல் வட்டத்திலும், புதுக் கோட்டை மாவட்டத்தில் கந்தர்வகோட்டை மற்றும் கரம்பக்குடி ஆகிய இரு வட்டங்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், 13.11.2023 மற்றும் 14.11.2023 நாட்களில் தமிழ்நாடு கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், இப்பகுதி களில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ள நிலையில், இந்த தகவலை ஆழ்கடலில் உள்ள மீனவர்களுக்கும், கரையில் உள்ள மீனவர்களுக்கும் தெரி விக்குமாறு மீன்வளத்துறை ஆணையர் மற்றும் கடலோர மாவட்ட ஆட்சியர்கள் வாயி லாக கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகப் பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி மற்றும் திண்டுக் கல் மாவட்டங்களின் கண்கா ணிப்பு அலுவலர்கள் தொடர் புடைய மாவட்டங்களுக்கு விரைந்து சென்று முன்னெச் சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மாநில, மாவட்ட அவசர கால செயல்பாட்டு மய்யங்கள் 24 மணி நேரமும் முறையே 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைப் பேசிகளுடனும், கூடுதலான அலுவலர்களுடனும் இயங்கி வருகின்றன.

பொதுமக்கள்,  Whatsapp எண்.94458 69848 மூலம் புகார்களை பதிவு செய்யலாம்.

424 கடலோரப் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள முன் எச்ச ரிக்கை அமைப்புகள் மூலம் சைரன் ஒலி, நேரடி ஒளிபரப்பு மூலம் எச்சரிக்கைகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட எச்ச ரிக்கை செய்திகள் பரப்பப்படு கின்றன.

பொதுவான முன்னெச்ச ரிக்கை நடைமுறை மூலம் பொதுமக்களுக்கு புயல், வெள்ள அபாய எச்சரிக்கை வழங்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

TNSMART செயலி மூலமா கவும், அச்சு, மின்னணு மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலா கவும் பொதுமக்களுக்கு உரிய காலத்தில் வானிலை முன்னறிவிப்பு, வெள்ள அபாய எச்ச ரிக்கை மற்றும் மின்னல் எச் சரிக்கை வழங்கப்படுகிறது.

பாதுகாப்பு மய்யங்கள்

கடலோர மாவட்டங்களில் 1.13 லட்சம் நபர்கள் தங்கும் வகையில் 121 பல்நோக்கு பாதுகாப்பு மய்யங்கள் தயார் நிலையில் உள்ளன.

பள்ளிகள், கல்லூரிகள், சமூ கக் கூடங்கள் மற்றும் திருமண மண்டபங்கள் என மொத்தம் 4967 நிவாரண முகாம்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

பெருநகர சென்னை மாநக ராட்சியை பொறுத்தமட்டில் 169 நிவாரண முகாம்கள் உள்ள தோடு, மழைநீரை வெளியேற்ற 260 பம்புகள் தயாராக வைக் கப்பட்டுள்ளன.

பேரிடர் காலங்களில் தேடல், மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி, திருநெல்வேலி மாவட்டத்தி லுள்ள மணிமுத்தாறு, கோயம் புத்தூர் மற்றும் திருச்சிராப் பள்ளி ஆகிய மாவட்டங்களில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை யின் 400 வீரர்கள் கொண்ட 12 குழுக்கள் நிலைநிறுத்தப்பட்டு உள்ளன.

மேலும், தேசிய பேரிடர் மீட்புப்படையின் 200 நபர்கள் அரக்கோணம் மற்றும் சென்னையில் தயார் நிலையில் உள் ளனர்.

பாதிப்புக்குள்ளாகும் மக் களை முன்கூட்டியே நிவாரண முகாம்களில் தங்க வைக்கவும், நிவாரண முகாம்களில் பாது காக்கப்பட்ட குடிநீர், மருத்துவ வசதி, மின்சாரம் மற்றும் இதர அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும்;

மனித உயிரிழப்பு, கால் நடை இறப்பு மற்றும் சேதம டைந்த குடிசை, வீடுகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங் கவும் மாவட்ட ஆட்சியர்க ளுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆய்வின் போது கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய் நிருவாக ஆணையர் எஸ்.கே. பிரபாகர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை இயக்குநர், சி. அ.ராமன், ஆகிய அலுவலர்கள் உடன் இருந்த னர் என்று அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *