மகளிர் நாள் கருத்தரங்கம்

1 Min Read

மாதனூர், மார்ச் 8- திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 06.03.2025 அன்று வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் மகளிர் நாள் முன்னிட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் (பொறுப்பு)டி.கே.கங்கா தலைமையேற்றார்.பேராசிரியர் ஆர்.ராஜேஸ்வரி அனைவரையும் வரவேற்றார்.வேலூர் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ச.ரம்யா தொடக்க உரையாற்றினார்.பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் இர.அன் பரசன்,வேலூர் மாவட்ட திராவிடர் கழக தலைவர் வி.இ.சிவக்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் திராவிடர் கழக மகளிரணி தோழர், எழுத்தாளர் ந.தேன் மொழி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பெண்ணுரிமை குறித்து கல்லூரி மாணவிகளிடம் உரையாற்றினார். வேலூர் மாவட்டபகுத்தறிவாளர் கழக செயலாளர் முனைவர் வே.வினாயக மூர்த்தி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

இந்த நிகழ்வில் கல்லூரி பேராசிரி யர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துக் கொண்டு பயன் பெற்றனர். முடிவில் பேராசிரியர் அர்ச்சனா நன்றி உரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *