வேலாயுதம்பாளையம், மார்ச் 8- கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா திராவிடர் கழக பொதுக்குழு தீர்மானம் விளக்க பொதுக்கூட்டம் 2-3-2025 அன்று மாலை எழுச்சியுடன் நடைபெற்றது.
கரூர் ஒன்றிய தலைவர் சு. பழனிச்சாமி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் காப்பாளர் வே ராஜு, மாவட்டத் தலைவர் ப. குமாரசாமி, மாவட்டச் செயலாளர் காளிமுத்து, பொதுக்குழு உறுப்பினர்கள் சே. அன்பு, கட்டளை வைரவன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ம. ஜெகநாதன், மற்றும் தொடக்க உரையை மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா ஜெயக்குமார் அவர்கள் உரையாற்றினார்.
சிறப்புரை மாநில கிராமப்புற பிரச்சார அமைப்பாளர் அதிரடி க. அன்பழகன் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா குறித்து தலைவர்களுடைய பங்களிப்பையும், தந்தை பெரியார் திராவிட இயக்க தலைவர்கள் செய்த தொண்டு தியாகங்கள் குறித்தும் விரிவாக பேசினார்.
சிதம்பரத்தில் நடைபெற்ற மாநில பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்ற பட்ட தீர்மானங்களை இக்காலகட்டத்தில் நிறைவேற்ற வேண்டும் ஒன்றிய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், இந்தி மொழியை திணிக்கும் சதியை முறியடிக்க வேண்டும் என்றும் பேசினார்.
நிகழ்ச்சியில் மா ராமசாமி செயலாளர் மாவட்ட கலை இலக்கிய அணி, கரூர் நகர தலைவர் ம. சதாசிவம், கிருஷ்ணராயபுரம் ஒன்றிய தலைவர் பெருமாள், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜா, த.சி அக்பர் தலைவர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், கிருஷ்ணராயபுரம் ஒன்றிய செயலாளர் வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் முடிவில் ச. மோகன் மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் நன்றியுரை ஆற்றினார்.