உலக மகளிர் நாள் பெண்கள் முன்னேற்றத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் செய்த அரும் பெரும் சாதனைகள்

viduthalai
3 Min Read

சென்னை, மார்ச்.8- மகளிர் நாளை கொண்டாடும் வேளையில் பெண்கள் முன்னேற்றத்துக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்த சாதனை திட்டங்கள் என்னென்ன? என்பதை தமிழ்நாடு அரசு பெருமிதத்துடன் பட்டியலிட்டு விளக்கியுள்ளது.

புரட்சிகர திட்டங்கள்

தமிழ்நாடு

 

தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ஆம் தேதி பல்வேறு நாடுகளும் உலக மகளிர் நாளைக் கொண்டாடுகின்றன. தமிழ்நாடு உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் மகளிர் நாளை மகளிர் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் கொண் டாடுகின்றன. முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் 2021-இல் ஆட்சி பொறுப் பேற்றபின் பெண்கள் சமுதாயம் மேலும் முன்னேறுவதற்கான பல புரட்சிகரமான திட்டங்களை நடைமுறைப்படுத்தி இந்திய மாநிலங்களுக்கு மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கும் வழிகாட்டி வருகிறார்கள்.

அரசு பேருந்துகளில் பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணமில்லா விடியல் பயணத்திட்டம், இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம், பணிபுரியும் மகளிருக்கு திருச்சி, கூடுவாஞ்சேரி, தாம்பரம், ஓசூர், திருவண்ணாமலை, பரங்கிமலை, சேலம், வேலூர், தஞ்சாவூர், பெரம்பலூர், விழுப்புரம், நெல்லை ஆகிய இடங்களில் ரூ.71 கோடியில் பாதுகாப்பான தோழி விடுதிகள் திட்டம் உள்பட மகளிர் சமுதாய மேம்பாட்டிற்கு புரட்சிகரமான புதிய பலதிட்டங்களை அறிமுகப்படுத்திநிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

மகளிர் இடஒதுக்கீடு

பெண்களுக்கு உரிய அங்கீகாரம் சமூக நீதி, சமத்துவம், ஆகியவற்றை அளித்திடும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024-அய் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் உருவாக்கி கடந்த ஆண்டு வெளியிட்டார். மகளிர் திருமண நிதியுதவித் திட்டங்களின்கீழ், இதுவரை 1,26,637 பெண்களுக்கு, ரூ.1,047 கோடி திருமண நிதியுதவி வழங்கப்பட்டு உள்ளது. 68,927 மகளிருக்கு 8 கிராம் தங்க நாணயங்களுடன் நிதியுதவிகளும், 57,710 பேருக்கு நிதி யுதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.

கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட மகளிர் சுயஉதவிக் குழுக் கடன் களில் 31.3.2021 அன்றைய தேதியில் நிலு வையில் இருந்த கடன் தொகைரூ.2,755,99 கோடி தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. அரசுப் பணிகளில் மகளிருக்கான இடஒதுக்கீடு 30 சதவீதம் என்பதை 40 சதவீதமாக உயர்த்தியதால், மகளிர் பலர் அரசு அலுவலகங்களில் கூடுதல் வேலைவாய்ப் புகளைப் பெற்று வருகின்றனர்.

அரசு பணிகளில் உள்ள மகளிருக்கான மகப்பேறு விடுப்பு 9 மாதம் என்பது 12 மாதங்களாக உயர்த்தப்பட்டது. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் உச்ச வரம்பு ரூ.12 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 1,25,167 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.6,265.41 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. சத்துணவு மய்யங்களில் பணிபுரியும் சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்க்கான ஓய்வு வயது 58-இல் இருந்து 60 ஆக உயர்த் தப்பட்டு உள்ளது.

பெண் தொழில் முனைவோருக்கு மானியம்

கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு ரூ.35.35 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. பெண் தொழில் முனைவோரின் புத்தொழில்களுக்கு ரூ.15 லட்சம் வரை மானிய நிதி வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் சமூக நீதியை மேம்படுத்திடும் நோக்கில் 11,906 பணிபுரியும் பெண்களுக்கு ரூ.331.13 கோடியும், 32,338 மகளிர் தொழில் முனை வோருக்கு ரூ.191.23 கோடியும் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க 39 புதிய மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு காவல்துறையில் மகளிர் காவலர்கள் இணைந்து 50 ஆண்டுகள் நிறைவுபெற்ற தையொட்டி நடைபெற்ற பொன்விழா நிகழ்ச்சியில் சிறப்பு அஞ்சல் உறை வெளி யிடப்பட்டு, பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் அவள் திட்டம் அறிமுகப்படுத்துகையில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டினை முன் னிட்டு மகளிர்க்கான கலைஞர் கலைத் துறையில் சிறந்து விளங்கியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. கோவில்களில் 11 பேர் பெண் ஓதுவார்களாக நியமிக்கப் பட்டுள்ளனர் .

நாளைய உலகம் போற்றும்

தொழிற்சாலைகளில் வேலைக்குச் செல்லும் பெண்கள் மனக் கவலை தீர்க் கும் வகையில் தமிழ்நாடு தொழில் முன் னேற்ற நிறுவனம் (சிப்காட்) தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள 17 சிப்காட் தொழில் பூங்காக்களில் குழந்தைகள் காப்பகங்களைத் தொடங்கியுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இத்தகைய புதிய புதிய திட்டங்களை நிறைவேற்றி, தொடர்ந்து பல்வேறு வகை யிலும் மகளிர்க்கான சலுகைகளை வழங்கி வருவதால், சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், மகளிர் சமு தாயம் அடைந்து வரும் முன்னேற்றங்கள் இந்தியாவிற்கே வழிகாட்டுகின்றன. இந்த வரலாற்று நிகழ்வுகளை நாளைய உலகம் போற்றும் என்பது திண்ணம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *