புதுவை, மார்ச் 8 மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு, மும் மொழிக் கொள்கை ஆகிய விவகாரங்களில் புதுவை அரசின் நிலைப்பாட்டை முதலமைச்சர் என்.ரங்கசாமி தெளிவுபடுத்த வேண்டும் என காங்கிரஸ் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறியுள்ளார்.
புதுச்சேரியில் உள்ள மாநில காங்கிரஸ் அலு வலகத்தில் 5.3.2025 அன்று செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
மறுசீரமைப்பு
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பை விகிதா சார அடிப்படையில் சீர மைக்கவுள்ளதாக ஒன்றிய அரசு கூறுகிறது. இதனால், தென் மாநிலங்களில் மக்களவை உறுப்பினா்கள் எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் உள்ளது. இதனால், நமது உரி மைகளை இழக்கும் நிலை ஏற்படும் என தமிழ்நாடு, கருநாடகம், கேரளம் உள்ளிட்ட தென் மாநில சோ்ந்த முதலமைச்சர்கள் எதிா்க்கின்றனா்.
தமிழ்நாடு முதல மைச்சர் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட் டியதால், தென் மாநில முதலமைச்சர்கள் இணைந்து குரல் எழுப்பும் நிலை ஏற்பட் டுள்ளது. ஆனால், புதுவை முதலமைச்சர் என்.ரங்கசாமி இந்த விடயத்தில் மவுனம் காக்கிறாா்.
மக்கள்தொகையின்படி கோவா, அருணாசல பிர தேசங்களுக்கு இணையாக புதுவை உள்ளது. ஆனால் கோவா, அருணாசல பிரதேசத்தில் 2 மக்களவை உறுப்பினா்களும், தலா ஒரு மாநிலங்களவை உறுப்பினரும் உள்ள நிலையில், புதுவையில் ஒரு மக்களவை உறுப்பினா் மட்டும் உள்ளாா்.
அத்துடன், கோவா வுக்கு 40 எம்எல்ஏக்களும், அருணாசல பிரதேசத் துக்கு 60 எம்எல்ஏக்களும் உள்ள நிலையில், புதுவை யில் 33 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனா்.
எனவே, புதுவை எம்பிக்கள் எண் ணிக்கையை 2-ஆகவும், எம்எல்ஏக்கள் எண்ணிக் கையை 40 ஆகவும் உயா்த்த புதுவை சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும்.
தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்டவற்றில் தென்னிந்திய அளவில் புதுவை மட்டும் தனித்து நிற்கும் நிலையை தவிா்க்க வேண்டும். தென் மாநிலங்களின் முதலமைச்சர்கள் கூட்ட மைப்பில் புதுவையையும் இணைக்க வேண்டும்.
எதிா்காலத்தில் புதுவைக்கு ஒன்றிய அரசிடமிருந்து வரி வருவாய் இழப்பு, உரிமை இழப்பு ஏற்படும். இந்த விடயத்தில் புதுவை திமுக ஆளும் கட்சிக்கு அழுத்தம் தர வேண்டும்.
ஒன்றிய அரசு மும்மொழிக் கொள்கை என்னும் பெயரில் புதுவையில் ஹிந்தி திணிப்பில் ஈடுபட் டுள்ளது. புதுவையில் அரசுப் பள்ளிகளில் சிபிஎஸ்இ திட்டத்தால் மும்மொழிக் கொள்கை ஏற்கப்பட்டுள்ளது.
தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழிக் கொள்கை ஆகிய விவகாரங்களில் புதுவை அரசின் நிலைப் பாட்டை முதலமைச்சர் என்.ரங்கசாமி தெளிவு படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.