எச்சரிக்கை: 6 மாதங்களில் இணையவழி மோசடியில் ரூ.12,811 கோடி இழப்பு!

viduthalai
1 Min Read

புதுச்சேரி, மார்ச் 8- இந்தியாவில் 2024-ஆம் ஆண்டு ஜூலை முதல் டிசம்பா் வரையிலான 6 மாதங்களில் இணையவழி மோசடியில் ரூ.12,811 கோடியை மக்கள் இழந்துள்ளதாக தேசிய இணையவழி குற்ற ஒருங்கி ணைப்புக் குழுவின் துணை இயக்குநா் அகி லேஷ்கா் கூறினாா்.

பயிற்சி முகாம்

புதுச்சேரி கோரிமேட் டில் உள்ள காவலா் பயிற்சி மய்ய வளாகத்தில் காவல் துறை அதிகாரிகளுக்கான இணையவழி குற்றத் தடுப்பு பயிற்சி முகாம் 6.3.2025 அன்று தொடங் கியது. புதுச்சேரி காவல் கண்காணிப்பாளர் அஜித் குமாா் சிங்லா பயிற்சியைத் தொடங்கி வைத்தாா்.
இணையவழி குற்ற ஒருங்கிணைப்பு தேசியக் குழுவின் துணை இயக் குநா் அகிலேஷ்கா் பேசிய தாவது:

நாட்டில் தற்போது இணையவழிக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. 2024-ஆம் ஆண்டில் ஜூலை முதல் டிசம்பா் மாதம் வரை 9.32 லட்சம் இணையவழி குற்றப் புகாா்கள் பதிவாகியுள்ளன. இந்த 6 மாதங்களில் இணையவழி மோசடியில் ரூ.12,811 கோடியை மக்கள் இழந்துள்ளனா். இதில் ரூ.2,114 கோடி இணைய வழிக் குற்றப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.

இணையவழி மோசடி யில் ஈடுபடுவோா் வெளி நாடுகளில் இருந்து செயல் படுகிறாா்கள். சீனாவைச் சோ்ந்தவா்கள் மோசடிக்கு தலைமை வகிப்பது கண்டறியப் பட்டுள்ளது. பனாமா, மியான்மா், பாகிஸ்தான், துபை போன்ற நாடுகள் இணைய வழி மோசடி மய்யங்களாக உள்ளன.
இணையவழி மோசடி செய்து கிடைக்கும் பணமானது, கிரிப்டோ கரன்சியாக மாற்றப்பட்டு வெளிநாடுகளுக்கு எளிதாக கொண்டு செல்லப்படுகிறது. இதைத் தடுப்பதற்கு ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இணையவழி மோச டியை தடுக்க வங்கிகளின் ஒத்துழைப்பு அவசியம். அதன்மூலம் பணத்தை முடக்கி, மீட்டுக் கொடுக்க முடியும். வங்கிகள் ஒத்து ழைப்பால் போலி வங்கிக் கணக்குகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம் என்றாா். பயிற்சியில் முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா்.கலைவாணன் மற்றும் காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா். இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு எஸ்.பி. பாஸ்கரன் தொகுத்து வழங்கினாா்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *