ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் தேசிய மாணவர் படையின் வீரமாராயம் விருதினைப் பெற்றார்

1 Min Read

ஜெயங்கொண்டம், மார்ச்8- மதுரை இலக்கிய மன்றம் சிறீ அருணாச்சலா கல்வி அறக்கட்டளை மதுரை மற்றும் Y.M.C.A. MADRAS INTERNATIONAL இணைந்து வழங்கிய 2025-ஆம் ஆண்டிற்கான தேசிய மாணவர் படையில் முப்படை பயிற்று ஆசிரியர்களுக்கு வீரமாராயம் விருது 28.2.2025 அன்று சென்னை வேப்பேரியில் உள்ள Y.M.C.A. உள்அரங்கில் நடை பெற்றது.

திராவிடர் கழகம்

இந்த விருது பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர் பணியோடு மாணவர்கள் மத்தியில் நாட்டுப்பற்றையும், நல்லொழுக்கத்தையும் வளர்த்திட பணியாற்றி வரும் தேசிய மாணவர் படை அதிகாரிகளுக்கு சங்க காலத்தில் ஆகச் சிறந்த போர்படை தளப திக்கு வழங்கப்பட்ட ‘வீரமாராயம்’ எனும் பட்டத்தை அடிப் படையாகக் கொண்டு ‘வீர மாராயம்’ விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

அதில் ஜெயங்கொண் டம் பெரியார் மெட்ரிக் பள்ளியை சேர்ந்த அசோசியேட் N.C.C. ஆபீஸர் கே.ராஜேஷ் அவர் களுக்கு இந்த வீரமராயம் விருதினை சென்னையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை தலைவர் வே.பாலகிருஷ்ணனால் வழங்கப்பட்டது. பின்பு ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி முதல்வர் ஆர்.கீதா அவர்களால் காலை கூட்டத்தில் கவுரவிக்கப்பட்டார். இதனை நமது பள்ளி யின் தாளாளர் வீ.அன்பு ராஜ் அவர்களும், கே.ராஜேஷ் அவர்களுக்கு பாராட்டினை தெரிவித் தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *