“ஹோலி விழாவிற்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டிய காவல்துறையே மிரட்டுகிறது.
ஹோலி விழா அன்று இஸ்லாமியர்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்.
இது மிரட்டல் அல்ல கோரிக்கை சொல்வது உத்தரப் பிரதேசத்தின் சம்பல் மாவட்ட காவல்துறை கணகாணிப்பாளர் அனுஜ் சவுதிரி.
ஹோலி விழா மார்ச் 13 ஆம் தேதி வட இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த விழா மிகவும் மோசமான ஒன்றாக போய்விட்டது, ஹோலி அன்று பெண்கள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என யாருமே வெளியில் வர அஞ்சும் நிலைக்குச் சென்றுவிட்டது, சில ஆண்டுகளாக ஹோலி விழாவிற்குப் பிறகு வரும் படங்கள் எல்லாம் மிகவும் ஆபாசமான ஒன்றாகவே உள்ளது.
மோசமான நிகழ்வுகள்
சில ஆண்டுகளாக ஹோலி அன்று வெளியில் செல்லும் இஸ்லாமியர்கள் மீது சாக்கடை மற்றும் கழிவுகளை அள்ளி வீசும் கொடுமையான நிகழ்வு நடக்கிறது, இது தொடர்பாக புகார் அளித்தால் பூரா நா மானோ ஹோலி ஹை(தப்பா என்ன வேண்டாம் ஹோலி விழா) எஞ்சாய் என்று காவல்துறையே சொல்லுகிறது.
ஹோலி அன்று தாக்குதல் தொடர்பான புகார்கள் நூற்றுக்கணக்கில் வட இந்திய நகரங்களில் பதியப் படுக்கிறது. எல்லாமே பாலியல் துன்புறுத்தல் வழக்குதான்.
இந்த நிலையில் மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகளை அகற்றும் பணியின் பாதுகாப்பை மேற்கொள்ளச் சென்ற சம்பல் மாவட்ட காவல்துறை ஆணையர் அனுஜ் சவுதிரியிடம் ஹோலி விழாவுக்கான பாதுகாப்பு விபரம் குறித்து கேட்டபோது, முஸ்லீம்கள் ஒரு நாளைக்கு 5 முறை தொழுகிறார்கள். மாதத்திற்கு 4 ஜும்மா(வெள்ளி)வருகிறது. இதற்கு ஹிந்துக்கள் யாருமே எதிர்ப்பு தெரிவிப்பதில்லை.
ஆனால் ஹோலி ஹிந்துக்களின் விழா ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே வருகிறது.
இந்த ஒருமுறை வரும் விழாவின் போது முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்துவதாக புகார்கள் வருகிறது.
ஹோலி அன்று உற்சாகம் மிகுதியில் இது எல்லாம் நடக்கும் சொல்லும் போது தவறாக நினைத்துக்கொள்ளாதீர்கள் ஹோலீ என்று சொல்லித்தானே வண்ணம்பூசுகிறார்கள்
அப்படி வண்ணம் பூசும் போது சில நேரத்தில் கைகள் உடலில் எங்கும் பட்டுவிடும்
உடனே அதைப்புகாராக எடுத்துகொண்டு வருகிறார்கள்
சட்டம் ஒழுங்கு பிரச்சினை
இதனால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை உருவாகிறது. ஆகவே நாங்கள் கூறுகிறோம்
ஹோலி அன்று இஸ்லாமியர்கள் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம், பிரச்சினை முடிந்தது ஹோலி அன்று பொது இடத்தில் வருவதால் தானே பிரச்சினை எழுகிறது, ஆகவே வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என்று கூறுகிறார்.
2022 ஆம் ஆண்டு மதுரா மற்றும் பதேகஞ்ச், அலிப்பூர் உள்ளிட்ட சில நகரங்களில் ஹோலி அன்று குடிப்பதற்காகவே செய்யப்படும் பாங்க்(கஞ்சா சாற்றில் செய்யப்படும் பால்) உட்கொண்டு போதையில் இஸ்லாமியர்களின் வீட்டிற்குள் புகுந்த பாலியல் சீண்டலில் ஈடுபட்ட புகார்கள் மேலே கூறிய மூன்று நகரங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாலியல் சீண்டல்
வீட்டில் இருந்தாலும் உள்ளே புகுந்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுகிறார்கள். ஆகவே அடுத்த முறை இந்த காவல் அதிகாரி ஹோலி அன்று முஸ்லீம்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுங்கள் என்று கூடச் சொன்னாலும் சொல்வார் போலும்.