எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் பற்றி பா.ஜ.க.வினர் கவலைப்படவேண்டாம்: அகிலேஷ்

1 Min Read

அரசியல்

லக்னோ ஜூலை 11- எதிர்வரும் 2024 நாடாளுமன்ற  தேர்தலில் மத்தியில் ஆளும் கட்சியான பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து அகற் றும் நோக்கில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் நட வடிக்கைகளை முன்னெ டுத்தார். 

இதனைத் தொடர்ந்து பாட்னாவில் கடந்த மாதம் 23ஆம் தேதி எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள் பட 15க்கும் மேற்பட்ட கட்சிகள் பங்கேற்றன. நாடாளுமன்ற தேர் தலில் பா.ஜ.க.வை தோற் கடிப்பதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன் றிணைந்து செயல்பட முடிவு எடுக்கப்பட்டது. 

அதேசமயம் அந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி களின் பிரதமர் வேட் பாளர் என்பது குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் முடிவு எடுக்கவில்லை. எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் இம் மாதம் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் பெங்களூரில் நடைபெற உள்ளது. தற் போது எதிர்க்கட்சிகளின் தலைவர் யார் அல்லது அவர்களின் பிரதமர் வேட்பாளர் யார் என்று தீவிர ஊகங்கள் நிலவி வருகிறது. 

இந்நிலையில், சமாஜ் வாடி கட்சி தலைவரும், உத்தரப் பிரதேசத்தின் மேனாள் முதலமைச்சரு மான அகிலேஷ் நேற்று (10.7.2023) செய்தியாளர் களை சந்தித்து பேசினார்.  அப்போது, எதிர்க்கட்சி களின் பிரதமர் வேட்பா ளராக உங்களை கருது கிறீர்களா என்று அகி லேஷ் யாதவிடம் செய்தி யாளர்கள் கேட்டனர். 

அதற்கு அகிலேஷ் பதிலளிக்கையில், எதிர்க்கட்சிகள்  பல திறமையான தலைவர் களை கொண்டுள்ளது. கூட்டணியின் முகம் குறித்த முடிவு பின்னர் தீர்மானிக்கப்படும். எங்க ளுக்கு பல முகங்கள் உள் ளன (பிரதமர் பதவிக்கு) நேரம் வரும் போது நாங் கள் முடிவு செய்வோம் என்று தெரிவித்தார். ஆனால் இது குறித்து பாஜக ஏன் கவலைப்படு கிறது என்று கூறினார்.னர் கவலைப்படவேண்டாம்:  அகிலேஷ்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *