படித்தவர்களைப் பெருமைப்படுத்தும் பதோவா பல்கலைக்கழகம்

Viduthalai
6 Min Read

பதோவா பல்கலைக்கழகம் (Università degli Studi di Padova, UNIPD) இத்தாலியின் பதோவா நகரத்தில் உள்ள ஒரு இத்தாலிய பல்கலைக்கழகமாகும்.
இது கி.பி.1222ஆம் ஆண்டு போலோனியா பல்கலைக் கழகத்திலிருந்து வந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழுவால் உருவாக்கப்பட்டது, இது இத்தாலியில் இரண்டாவது பழைமையான பல்கலைக்கழகமாகவும், உலகின் அய்ந்தாவது பழைமையான தற்போது இயங்கி வரும் பல்கலைக்கழகமாகவும் உள்ளது.
பதோவா பல்கலைக்கழகம் நவீன அய்ரோப்பாவில் மிகவும் முக்கியமான பல்கலைக்கழகங்களில் ஒன்றாக இருந்தது, இன்று உலகம் அறிவியலின் உச்சத்தைத் தொட்டுக்கொண்டு இருக்கிறது என்றால் அதற்கு இந்த பல்கலைக்கழகம் மிக முக்கிய பங்கு வகித்தது. ஆம் நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ் உட்பட பல இத்தாலிய மறுமலர்ச்சி கணிதவியலாளர்களைக் கொடுத்தது இந்தப் பல்கலைக்கழகம் தான்
இந்தப் பல்கலைக்கழகத்தின் சுவரில் உலகின் மிகவும் புகழ்பெற்ற அறிவியலாளர்கள், கணித அறிஞர்கள், தத்துவஞானிகள் பெற்ற பட்டங்கள், இப்பல்கலைக்கழகத்தின் எல்லா சுவரையும் அலங்கரிக்கும்.
ஞாயிறு மலர்

மிகவும் புகழ்பெற்ற வானியல் வல்லுநர் கலிலியோ கலிலி இங்குதான் பாடம் பயின்றார். இங்கு அவர் பேராசிரியராகவும் பயின்றார். அவரது பட்டப் படிப்பிற்கான சான்றிதழும் இந்த பல்கலைக்கழக சுவரை அலங்கரிக்கிறது.
1300களில் இருந்து இன்றுவரை மிகவும் புகழ்பெற்றவர்களின் பட்டங்கள் ஆயிரக்கணக்கில் அலங்கரிக்கின்றன. இங்கு எல்லாருடைய பட்டங்களும் அலங்கரிக்கும் என்று நினைக்க வேண்டாம். இங்கே படங்களைப் பதிக்கவேண்டும் என்றால் பல குழுக்களின் ஒப்புதலைப் பெறவேண்டும்.
உலகத் தலைவர்களின் பட்டங்கள் வெறும் பதவி அதிகாரத்தை வைத்து இங்கு அலங்கரிக்க முடியாது, அதற்கான தகுதி கல்வி உயர்கல்வி, தனது கல்வியால் சமூகத்திற்கு என்ன கொடுத்தார்கள் என்று பல குழுக்களை வைத்து ஆய்வு செய்த பிறகு பட்டத்தை சுவரில் அலங்கரிக்க பதிப்பார்கள்.

உலகின் ஒவ்வொரு பல்கலைக்கழகமும் தங்கள் பல்கலைக்கழகத்தில் பெரும் தலைவர்கள் பயின்றால் அவர்களின் பட்டங்களையும் சிலைகளையும் பல்கலைக்கழகத்தின் அரங்குகளில் வைத்து பெருமைப்படுத்துவார்கள்.
காந்தியாரின் பட்டப்படிப்பு சான்றிதழ் நகல் இன்றும் யுனிவர்சிடி கல்லூரி லண்டன் பல்கலைக்கழகத்தில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது.
ஞாயிறு மலர்

இந்தியப் பிரதமர்களின் சான்றிதழ்கள்
இந்தியா 75 ஆண்டுகளாக பல பிரதமர்களைக் கண்டுள்ளது. அவர்கள் அனைவருமே அவர்கள் படித்த பல்கலைக்கழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
ஜவஹர்லால் நேரு (14.11.1889 – 27.05.1964) சட்டம் பயின்றவர் – இன்னர் டெம்பிள், லண்டன் இயற்கை அறிவியலில் ஆனர்ஸ் பட்டம் – டிரினிட்டி கல்லூரி, கேம்பிரிட்ஜ் (1910).
குல்சாரிலால் நந்தா (4.07.1898 – 15.01.1998)
பதவிக் காலம்: 27.05.1964 – 09.06.1964 ஆராய்ச்சி அறிஞர் – அலகாபாத் பல்கலைக்கழகம் (தொழிலாளர் பிரச்சினைகள்) (1920-21) எம்.ஏ., எல்.எல்.பி. – ஃபோர்மன் கிறிஸ்தவ கல்லூரி, லாகூர் மற்றும் ஆக்ரா கல்லூரி, ஆக்ரா.
லால் பகதூர் சாஸ்திரி (2.10.1904 – 11.01.1966)
பி.ஏ. தத்துவம் மற்றும் நெறிமுறைகள் – காசி வித்யாபீடம், வாரணாசி, உத்தரப்பிரதேச மாநில பல்கலைக்கழகம் (1925)
திருமதி இந்திரா காந்தி (19.11.1917 – 31.10.1984)
பி.ஏ. வரலாறு – சோமர்வில் கல்லூரி, ஆக்ஸ்ஃபோர்டு (1937) பாதபவனா, விஸ்வபாரதி பல்கலைக்கழகம், சாந்திநிகேதன்
– எகோல் நோவெல், சுவிட்சர்லாந்து, எகோல் இன்டர்நேஷனல், ஜெனீவா, புபில்ஸ் ஓன் ஸ்கூல், பூனா மற்றும் பம்பாய், பேட்மிண்டன் பள்ளி, பிரிஸ்டல் போன்ற கல்வி நிலையங்களில் பயின்றவர்.
மொரார்ஜி தேசாய் (29.02.1896 – 10.04.1995)
பி.ஏ. (ஆனர்ஸ்) – வில்சன் கல்லூரி, பம்பாய் பல்கலைக்கழகம், மும்பை (1917)
சரண் சிங் (23.12.1902 – 29.05.1987)
பி.எஸ்சி., எம்.ஏ., எல்.எல்.பி. – அரசு உயர்நிலைப் பள்ளி, மீரட் மற்றும் ஆக்ரா கல்லூரி, ஆக்ரா
ராஜீவ் காந்தி (20.08.1944 – 21.05.1991)
ஞாயிறு மலர்

வணிக விமானியாக பயிற்சி – டில்லி கிளப் இயந்திரவியல் பொறியியல் – இம்பீரியல் கல்லூரி, லண்டன் (1966) (முடிக்கப்படவில்லை) பொறியியல் – டிரினிட்டி கல்லூரி, கேம்பிரிட்ஜ், யு.கே. (1962) (பள்ளிக் கல்வி – டூன் பள்ளி, டெஹ்ராடூன் (1954)
விஸ்வநாத் பிரதாப் சிங் (25.06.1931 – 27.11.2008)
பி.ஏ. மற்றும் எல்.எல்.பி. – அலகாபாத் பல்கலைக்கழகம் பி.எஸ்சி. இயற்பியல் – ஃபெர்குசன் கல்லூரி, புனே பல்கலைக்கழகம்
சந்திர சேகர் (1.07.1927 – 8.07.2007)
எம்.ஏ. – அலகாபாத் பல்கலைக்கழகம், அலகாபாத் (உத்தரப்பிரதேசம்)
பி.வி.நரசிம்ம ராவ் (28.06.1921 – 23.12.2004)
சட்டத்தில் முதுகலை பட்டம் – ஹிஸ்லாப் கல்லூரி, நாக்பூர் பல்கலைக்கழகம் மனிதநேயத்தில் இளங்கலை பட்டம் – ஒஸ்மானியா பல்கலைக்கழகம், அய்தராபாத்.
அடல் பிகாரி வாஜ்பாய் (25.12.1924 – 16.08.2018)
எம்.ஏ. அரசியல் அறிவியல், டி.ஏ.வி. கல்லூரி, கான்பூர் பி.ஏ. இந்தி, சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலம் – லக்ஷ்மி பாய் கல்லூரி (விக்டோரியா கல்லூரி), குவாலியர்
எச். டி. தேவ கவுடா (18.05.1933 – )
சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ – எல்.வி. பாலிடெக்னிக், ஹாசன், கர்நாடகா
இந்தர் குமார் குஜ்ரால் (4.12.1919 – 30.11.2012)
பி.காம்., எம்.ஏ. – டி.ஏ.வி. கல்லூரி, ஹெய்லி காமர்ஸ் கல்லூரி மற்றும் ஃபோர்மன் கிறிஸ்தவ கல்லூரி, லாகூர் (தற்போதைய பாகிஸ்தான்), பஞ்சாப் பல்கலைக்கழகம் இடைநிலைக் கல்வி ஃபோர்மன் கிறிஸ்தவ கல்லூரி, பஞ்சாப் பல்கலைக்கழகம்
டாக்டர் மன்மோகன் சிங்
பிஎச்.டி. (டாக்டர் ஆஃப் பிலாசபி) பொருளாதாரத்தில், நஃபீல்டு கல்லூரி, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், ஆராய்ச்சி தலைப்பு: இந்தியாவின் ஏற்றுமதி போக்குகள் மற்றும் சுய-தாங்கிய வளர்ச்சிக்கான வாய்ப்புகள் (1962) எம்.ஏ. பொருளாதாரம், பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகர் (1954) பொருளாதாரத்தில் ஆனர்ஸ் பட்டம், செயின்ட் ஜான்ஸ் கல்லூரி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் (1957) பி.ஏ. (ஆனர்ஸ்) பொருளாதாரம், பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகர் (1952).
அலகாபாத் பல்கலைக்கழகம் 3 பிரதமர்களைத் தந்துள்ளது. மூன்று பிரதமர்களோடு படித்தவர்களின் தலைமுறைகள் பலர் இன்றும் எங்கள் தந்தை எங்கள் தாத்தா பிரதமர்களோடு வகுப்பில் உட்கார்ந்து படித்தவர்கள் என்று பெருமையோடு கைகளில் சான்றிதழ்களை வைத்துக்கொண்டு பேசுகிறார்கள் ஒவ்வொரு பட்டமளிப்பு விழாவிலும் அந்தப் பல்கலைக்கழகம் நாங்கள் இந்தியாவின் மூன்று பிரதமர்களைத் தந்தோம் என்று பெருமைப் பட்டுக்கொண்டுள்ளது.
மும்பை பல்கலைக்கழகம் மற்றும் பஞ்சாப் பல்கலைக்கழகம் நாங்களும் சிறந்த பிரதமர்களைத் தந்தோம் என்று பெருமைப்பட்டுகொள்கின்றன. பல பல்கலைக்கழகங்களில் பிரதமர்களுக்கு முனைவர் பட்டம் கொடுத்து தங்களின் பல்கலைக்கழகத்திற்கு பெருமை சேர்க்கிறது.

ஞாயிறு மலர்
ஒருவரைத் தவிர…

கடந்த 11 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடியின் படிப்புச் சான்றிதழைக் கேட்டு டில்லி, குஜராத் உள்ளிட்ட நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தனர். குஜராத் நீதிமன்றமோ மோடியின் சான்றிதழைக் கேட்ட அரவித் கெஜ்ரிவாலுக்கு அபராதம் விதித்தது.
03.03.2025 அன்று டில்லி பல்கலைக்கழகத்தில் மோடி எம்.ஏ. பொலிடிகல் சயின்ஸ் படித்தார் என்று உள்ளது அந்த சான்றிதழைக் காட்டுங்கள் என்று ஒரு சமூக ஆர்வலர் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தின் ஒவ்வொரு படியாய் ஊர்ந்து ஊர்ந்து இறுதியாக விசாரணைக்கு வந்தது, அந்த வழக்கில் ஆஜரான இந்தியாவின் சொலிசிடர் ஜெனரல் என்ன கூறினார் தெரியுமா? மோடியின் சான்றிதழைக் கேட்டவர்களை தண்டனைக்குள்ளாக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
மோடி பி.ஏ. பொலிடிகல் சயின்ஸ் டில்லி பல்கலைக் கழகத்தில் முடித்தார், எம்.ஏ. பொலிடிகல் சயின்ஸ் அகமதாபாத் பல்கலைக்கழகத்தில் முடித்தார் என்று அரசின் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.
10 ஆண்டுகளைக் கடந்தும் மூன்றாவது முறையாக பிரதமராக இருக்கும் மோடி எங்கள் பல்கலைக்கழகத்தில் படித்தார் என்று இரண்டு பல்கலைக்கழகங்களுமே பெருமை கொண்டிருக்கவேண்டும். ஆனால், இரண்டு பல்கலைக்கழகங் களும் மோடியின் சான்றிதழைத் தர மறுக்கின்றன. நீதிமன்றம் சென்றால் தனிநபரின் படிப்பு சான்றிதழைக் கேட்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்று கூறுகிறது.

ஞாயிறு மலர்
அகமதாபாத் பல்கலைக்கழகமோ சான்றிதழை அடிக்கடி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்பது அவமானப்படுத்தும் செயல் என்றே கூறிவிட்டது.
அப்படி என்றால் இத்தாலியில் உள்ள பதேவா பல்கலைக்கழக சுவரை அலங்கரிக்கும் சான்றிதழ்கள், இந்தியாவின் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்கள் பெருமை படப் பேசும் பிரதமர் எங்கள் பல்கலைக் கழகத்தில் படித்தவர்கள் என்று கூறுவது எல்லாம் பெருமை இல்லையா?
இந்தக் கட்டுரையை படித்த பிறகு யாரும் மோடியின் சான்றிதழைக் கேட்டு வழக்கு தொடரவேண்டாம் அப்படித் தொடர்ந்தால் தண்டிக்கப்படுவீர்கள். இது சொலிசிடர் ஜெனரலின் கட்டளை ஆகும். மோடியின் சான்றிதழில் அப்படி என்ன ரகசியம் உள்ளதோ?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *