கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

Viduthalai
3 Min Read

7.3.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* தமிழ் மொழியை ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக ஏன் ஆக்கக்கூடாது? அரசியல் சட்டத் தில் கூறப்பட்டுள்ள ஏனைய மொழிகளுக்கும் ஏன் அந்த வாய்ப்பு தரப்படவில்லை, ஒன்றிய அரசுக்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி.
* தமிழ்நாட்டுப் பெண்கள் முன்னேற்றத்திற்கு தொழில் முனைவோருக்கு நிதியுதவி, அரசு பணிகளில் 40 சதவீத இட ஒதுக்கீடு, கட்டணமில்லா பேருந்து பயணம், ஏழை பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை என எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி வருகிறது திராவிட மாடல் அரசு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* தொகுதி மறுசீரமைப்பு இருக்கட்டும்; மக்கள் தொகை கட்டுப்பாடு அமல்படுத்தாத மாநிலங்கள் விரைந்து நிறைவேற்ற ஒன்றிய அரசு வலியுறுத்த வேண்டும் என்கிறது தலையங்க செய்தி.
* பிற்படுத்தப்பட்டோருக்கு 42 சதவீத இட ஒதுக்கீடு, எஸ்.சி. உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு தெலங்கானா அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ராகுல் காந்தி தாராவிக்குச் சென்று தோல் தயாரிப்பு தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். அதானி குழுமத்திற்கு பாஜக தேவையற்ற சலுகைகளை வழங்குவதாகக் குற்றம் சாட்டினார்,
* ‘ஜைன மதம் ஹிந்து மதம் வேறு வேறு; ஜைன மதம் வேத மரபுகளை எதிர்க்கிறது’: மத்திய பிரதேச குடும்ப நீதிமன்றத்தின் முதல் கூடுதல் முதன்மை நீதிபதி தீரேந்திர சிங் தீர்ப்பு.
* நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் வாக் காளர் அடையாள அட்டை நகல் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எழுப்பும், டெரெக் ஓ’பிரையன் எம்.பி. எக்ஸ் தளத்தில் பதிவு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட் டங்களின் போது டில்லி காவல்துறையினரால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒடுக்குமுறைக்கு உள்ளான நாட்டின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஜாமியா மிலியா இஸ்லாமியா, அதிருப்தியாளர்கள் மற்றும் சிறுபான்மை நிறுவனம் என்ற அதன் அந்தஸ்தை பலவீனப்படுத்த முயற்சிப்பதாக கூறப்படும் தொடர்ச்சியான ஒடுக்குமுறையின் கீழ் மீண்டும் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது.
* தலைமை உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி ஜாய்மல்யா பாக்சியை கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
* இன்றைய உண்மையான அச்சுறுத்தல் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு உட்பட உலக அளவில் தீவிர வலதுசாரி அரசாங்கங்களால் பிரச்சாரம் செய்யப்படும் “புதிய பாசிசத்தை” எதிர்த்து போராடுவோம், கொல்லத்தில் நடை பெற்ற சி.பி.எம். கேரள மாநில மாநாட்டில் காரத் பேச்சு.

தி இந்து:

* தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை பஞ்சாப் மற்றும் அரியானாவை பாதிக்கும்: காங்கிரஸ் மூத்த தலைவர் மணிஷ் திவாரி எம்.பி. கருத்து.
* மகா கும்பமேளாவின் போது ரூ.30 கோடி சம்பாதிப்பதற்காக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் இருந்து அதிக பாராட்டு களைப் பெற்ற ஒரு படகோட்டி, பிரயாக்ராஜில் பல குற்ற வழக்குகளை எதிர்கொள்ளும் “குற்றவாளி” என எதிர்க்கட்சிகள் முதலமைச்சர் மீது கண்டனம்.
* தெற்கில் நாடாளுமன்ற இடங்களை குறைக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை காங்கிரஸ் தலைமையிலான தெலங்கானா அரசு எதிர்ப்பு. ஒன்றிய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட அமைச்சரவை முடிவு.
* ‘மனுஸ்மிருதி’புனித நூல்”? என்று கூறி, நேரடி தொலைக்காட்சி விவாதத்தின் போது அதை கிழித் ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆர்ஜேடி செய்தித் தொடர்பாளர் பிரியங்கா பாரதி மீதான வழக்கை ரத்து செய்ய அலகாபாத் உயர்நீதிமன்றம் மறுப்பு.

.- குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *