8.3.2025 சனிக்கிழமை திண்டுக்கல் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

2 Min Read

திண்டுக்கல்: மாலை 4 மணி * இடம்: குடகனாறு இல்லம், நத்தம் சாலை, திண்டுக்கல் * தலைமை:
இரா.வீரபாண்டியன் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: இரா.சக்தி சரவணன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * முன்னிலை: மயிலை நா.கிருஷ்ணன், வழக்குரைஞர் கொ.சுப்பிரமணியம் * சிறப்புரை: உரத்தநாடு
இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * பொருள்: சிதம்பரத்தில் நடைபெற்ற பொதுக்குழு தீர்மானங்களை நடைமுறைப்படுத்துதல், விடுதலை சந்தா, பிரச்சாரத் திட்டங்கள் * அழைப்பின் மகிழ்வில்: வழக்குரைஞர் மு.ஆனந்தமுனிராசன் (மாவட்ட செயலாளர்).

தாராபுரம் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

தாராபுரம்: மாலை 5 மணி * இடம்: முருகன் திருமண மண்டபம், கணியூர் * தலைமை: க.கிருஷ்ணன் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: ஜே.தம்பி பிரபாகரன் (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: தஞ்சை ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * வேண்டல்: அனைத்து கழக பொறுப்பாளர்களும், தோழர்களும் பங்கேற்க வேண்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
அகில இந்திய எல்அய்சி முகவர்கள் சங்கம் சார்பில் உலக மகளிர் நாள் விழா
சிந்தாதரிப்பேட்டை: காலை 11.30 மணி * இடம்: டிஜே நினைவகம், சிந்தாதரிப்பேட்டை, சென்னை * சிறப்பு சொற்பொழிவாளர்கள்: கீதா இளங்கோவன் (எழுத்தாளர், திரை இயக்குநர்), முனைவர் இரா.மஞ்சுளா (சென்னை சமுகப் பணிக்கல்லூரி * விழைவு: நிர்வாகிகள், மகளிர் அணி, லிகாய் சென்னை கோட்டம்-1.
உலக மகளிர் நாள் விழாவை முன்னிட்டு காரைக்கால் மாவட்ட இளைஞரணி மற்றும மாணவர் கழகம் இணைந்து நடத்தும்

கல்லூரி மாணவ-மாணவியருக்கான பேச்சுப்போட்டி
காரைக்கால்: காலை 10 மணி * இடம்: ஆயிரம் வைசியர் திருமண மண்டபம், காரைக்கால் * வரவேற்புரை: அறிவுச்செல்வன் (மாவட்ட செயலாளர், மாணவர் கழகம்) * தலைமை: மோ.மோகன்ராஜ் (மாவட்டத் தலைவர், மாணவர் கழகம்) * நடுவர்கள்: நாத்திக பொன்முடி, க.அகிலா, ஜெ.வைக்கமதி, குரு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்டத் தலைவர்) * தொடக்கவுரை: மு.இளமாறன் (மாநில சட்டக்கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர்) * சிறப்புரை: தேவ.நர்மதா (கழக பேச்சாளர்), சிவ.வீரமணி (கழகத் தலைவர், புதுச்சேரி மாநிலம்) * நன்றியுரை: ச.சசிகுமார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *