புதிய பொறுப்பாளர்கள்
கும்பகோணம் மாநகராட்சி நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்படுகிறார்கள்.
கும்பகோணம் மேலக்காவேரி பகுதி திராவிடர் கழகம்
வார்டு 1 முதல் 12 வரை
மேலக் காவேரி பகுதி தலைவர்: ந.காமராஜ், பகுதி செயலாளர்: க.திராவிட கார்த்தி
கும்பகோணம் பாலக்கரை பகுதி திராவிடர் கழகம்
வார்டு 13 முதல் 24வரை
பகுதி திராவிடர் கழகத் தலைவர்: தா.செல்வராசன், பகுதி கழக செயலாளர்: ரியாஸ்அகமது.
கும்பகோணம் தாராசுரம் பகுதி திராவிட கழகம்
வார்டு 25 முதல் 36 வரை
பகுதி கழகத் தலைவர்: கொற்கை நாதன், பகுதி கழக செயலாளர்: மதியழகன் (கவரை தெரு,)
கும்பகோணம் சுங்காங்கேட்டு பகுதி திராவிடர் கழகம்
வார்டு 37 முதல் 48 வரை
பகுதி கழகத் தலைவர்: திருவேங்கடம் குணசேகரன், பகுதி கழக செயலாளர்: விஜயேந்திரன்
குடந்தை, ஜூலை 11 குடந்தை மாநகர கழகக் கலந்துரையாடல் கூட்டம் 06.07.2023 அன்று மாலை 6 மணியளவில் கும்பகோணம் பெரியார் மாளிகையில் நடைபெற்றது
குடந்தை மாநகர செயலாளர் வழக்குரைஞர் பீ. இரமேஷ் தலைமை வகித்து உரையாற்றினார்
மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி, மாவட்ட செயலாளர் உள்ளிக்கடை சு.துரைராஜ், பகுத்தறிவாளர் கழக ஊடகப் பிரிவு மாநில செயலாளர் மா. அழகிரிசாமி ஆகியோர் முன்னிலை வகித்து உரை நிகழ்த்தி னார்கள்.
கழக மாநில ஒருங்கிணைப்பாளர்
இரா.ஜெயக்குமார் கலந்துரையாடல் கூட்டத் தின் நோக்கங்களை விளக்கியும் மாநகராட்சி பகுதி கலகங்களை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உருவாக்குவதின் நோக்கம் அதன் இறுதி இலக்கு அதனால் ஏற்படும் பயன்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அய ராத உழைப்பு, குறித்தும் உரை நிகழ்த்தினார்
மாவட்ட துணைச் செயலாளர் ஆ.தமிழ்மணி, மாவட்ட மகளிர் அணி தலைவர் எம். திரிபுரசுந்தரி, மாநகர மகளிர் அணி தலைவர் அம்பிகா கும்பகோணம் ஒன்றிய செயலாளர் மருதநல்லூர் மகாலிங்கம், செட்டி மண்டபம் பொறுப்பாளர் நிவாஸ், மாவட்ட இளைஞரணி தலைவர் பொறியாளர் க.சிவக் குமார், திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் அ.சங்கர், இராதாகிருஷ்ணன், மேலக்காவிரி கழகத்தின் பொறுப்பாளர்கள் முனைவர் ச.அஜிதன், செந்தமிழ்ச் செல்வன், அ.அரவிந்தன், மு.அஸ்வின், ச.லெட்சுமணன், ஜோ.ஆகாஷ் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.
தலைமைக் கழக அமைப்பாளர் குடந்தை க. குருசாமி இறுதியாக கருத்துரையாற்றினார்
கும்பகோணம் மாநகராட்சி பகுதி கழக புதியபொறுப்பாளர்களை கழக மாநில ஒருங் கிணைப்பாளர் இரா.ஜெயகுமார் அறிவித்தார். ஒன்றிய அமைப்பாளர் அசூர் செல்வம் நன்றி கூறினார்
6.7.2023 அன்று சென்னை பெரியார் திட லில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கழக தலைமை செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது எனவும், வைக்கம் போராட்ட நூற்றாண்டு -கலைஞர் நூற்றாண்டு விழா – தெருமுனை கூட்டங்களை கும்பகோணம் மாநகராட்சி உள்பட அனைத்துப் பகுதிகளிலும் நடத்துவது எனவும், வங்கிப் பணியாளர் தேர்வில் தமிழ்நாட்டு இளைஞர்கள் பெருமளவில் புறக்கணிக்கப்படுகிறார்கள். எனவே, ஒன்றிய அரசு கண்டித்து 14.7.2023 அன்று காலை 10 மணியளவில் தஞ்சாவூரில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு கண்டன குரல் எழுப்புவ தெனவும், கும்பகோணம் மாநகராட்சி பகுதி களில் முடிவடைந்த ‘விடுதலை’ சந்தாவை புதுப்பித்து புதிய சந்தாக்களை சேர்த்து வழங்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
கும்பகோணம் மாநகராட்சிகளின் வார்டு களில் கீழ்க்கண்டவாறு பகுதி கழகங்களை பிரித்து புதிய அமைப்புகளை அமைக்கப்படு கிறது. கீழ்க்கண்டவர்கள் பகுதி கழக பொறுப் பாளர்களாக அறிவிக்கப்படுகிறார்கள்.