குடந்தை அரசனுக்கு கழகப் பொறுப்பாளர்கள் வாழ்த்து!

1 Min Read

அரசியல்

குடந்தை, ஜூலை 11- குடந்தையில் நேற்று (10.7.2023) திராவிடர் கழக மாநில ஒருங் கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் 50 ஆவது பிறந்தநாள் காணும் ‘விடுதலை தமிழ் புலிகள்’ கட்சி நிறுவனத் தலைவர் குடந்தை அரசனுக்குப் பயனாடை அணிவித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90 இல் 80 புத்தகத்தை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார்

தலைமைக் கழக அமைப்பாளர் குடந்தை க.குருசாமி, மாநில பகுத்தறிவாளர்  கழக ஊடகப்பிரிவு தலைவர் அழகிரிசாமி, குடந்தை கழக மாவட்ட தலைவர் கு. நிம்மதி, பொதுக்குழு உறுப்பினர் மற்றும் இளைஞரணி தலைவர் க. சிவகுமார், குடந்தை மாவட்ட துணை செயலாளர்தமிழ் மணி, முனைவர் 

ச. அஜிதன், அசூர் செல்வம், மாவட்ட இளை ஞரணி துணை செயலாளர் அ. அரவிந்தன், க. ரிசுவான், ரியாஸ் அகமது, அசூர் செல்வம் திராவிடர் மாணவர் கழக பொறுப்பாளர்கள் லட்சுமணன், அஸ்வின் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் குடந்தை அரசனின் 50 ஆம் ஆண்டு பிறந்தநாளில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் கள் அலைபேசி மூலமாக வாழ்த்தினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *