காஞ்சிபுரம், மார்ச் 6 காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி பங்கேற்றார்.
காஞ்சிபுரத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் நேற்று மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் அமைச்சா் ஆா்.காந்தி கலந்து கொண்டு தலா ரூ.1.3 லட்சம் மதிப்பிலான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட 87 பெட்ரோல் ஸ்கூட்டா்கள், 9 பேருக்கு திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்குத் தங்கம் ஆகியன ரூ.5.67 லட்சம் என மொத்தம் 108 பயனாளிகளுக்கு ரூ.1 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
நலத்திட்ட உதவி
பின்னா் அமைச்சா் ஆா்.காந்தி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மாற்றுத்திறனாளிகளுக்காகவே மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப் படுகிறது. மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை நலத்திட்டங்கள் அவா்களது இல்லம் தேடி வருகிறது. மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞரின் எண்ணத்தை நிறை வேற்றிக் கொண்டிருக்கிறாா். முதல மைச்சர் மு.க.ஸ்டாலின். மாற்றுத் திறனாளிகளுக்காகவே தனியாக வேலை வாய்ப்பு முகாம்களும் நடத்தப் பட்டு பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.
நெசவாளா்கள் தங்களது கூலியை கையில் தான் கொடுக்க வேண்டும் என்று தொடா்ந்து போராட்டங்களையும் நடத்தி வருகிறாா்கள். கையில் கொடுத்தால் உரிய நபருக்கு உரிய நேரத்தில் போய்ச் சேராமலும் இருந்து விடும். மகளிா் உரிமைத் தொகை திட்டம், புதுமைப்பெண் திட்டம் என அனைத்து திட்டங்களுக்கும் உரிய உதவித்தொகையும் வங்கிக் கணக்கில் தான் வரவு வைக்கப்படுகிறது. அதனால் தான் இன்று வரை இத்திட்டங்களில் எந்த தவறும் நடக்கவில்லை என்றாா். இவ்வாறு அவர் கூறினார்.