மறைந்த தெய்வானை படத்திறப்பு

1 Min Read

மண்டலக்கோட்டையை சேர்ந்த கழகத் தோழர் க.சுரேந்திரனின் பெரியம்மா மா.நருவுசு (எ) தெய்வானை கடந்த மாதம் 18 ஆம் தேதி மறைந்தார். அவரின் நினைவேந்தல் நிகழ்ச்சி மண்டலக்கோட்டையில் 04.03.2025 அன்று மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா சுப்புலெட்சுமி தலைமையில் நடந்தது. மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மறைந்த நருவுசு (எ) தெய்வானை படத்தினை திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார். உரத்தநாடு தெற்கு ஒன்றிய தலைவர் த.ஜெகநாதன், துணைத் தலைவர் கு.லெனின், தி.மு.க. மேனாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் க.ரவிச்சந்திரன், புலவர் இரா.மோகன்தாஸ், அ.செந்தில்குமார் ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினார். மாணவர் கழகத் தோழர்கள் சற்குணம், அலெக்ஸ், சங்கீத் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *