தருமபுரி, மார்ச் 6- கடந்த 23.2.2025 ஞாயிறு அன்று மதியம் 1 மணியளவில் தருமபுரி பெரியார் மன்றத்தில் மாவட்ட திராவிடர் கழகம் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தினை ஒருங்கிணைத்து மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் பீம.தமிழ்பிரபாகரன் வரவேற்புரையாற்றினார். க.கதிர் பொதுக்குழு உறுப்பினர், இளைய.மாதன் துணைத்தலைவர் முன்னிலை வகித்தனர். தொடக்கவுரையாக சிதம்பரத்தில் நடைபெற்ற பொதுக்குழு தீர்மானங்களை மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர்.தமிழ்செல்வி உரையாற்றினார். பொதுக்குழு தீர்மானங்களை விரிவானதொரு விளக்கவுரையாக மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை. ஜெயராமன் நிகழ்த்தினார்.
தீர்மானங்கள்
திராவிடர் கழகத்தின் மூத்த தோழர் ஆசிரியர் இரா.பழனி(பணி நிறைவு) அவர்களை தருமபுரி நகர திராவிடர் கழக செயலாளராக நியமிக்கப்படுகிறது.
15/02/2025 அன்று சிதம்பரத்தில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழு தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவதென தீர் மானிக்கப்படுகிறது. பகுத்தறிவு நாளேடான விடுதலையை தருமபுரி மாவட்டத்தில் முடிவடைந்த சந்தாக் களை புதுப்பித்து வழங்குவதென தீர்மானிக் கப்படுகிறது.
தருமபுரி கழக மாவட்டத்தில் கிராமம், நகரம், பேரூராட்சி, நகராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் எதிர்வரும் 3 மாத காலத்திற்குள்( மார்ச், ஏப்ரல், மே) மாவட்டத்தில் 10 புதிய கிளை கழகங்களை உருவாக்குவதென தீர்மானிக்கப்படுகிறது.
கலந்து கொண்டோர்
அ.சங்கீதா பொதுக் குழு உறுப் பினர், கரு.பாலன் நகர தலைவர், இரா.பழனி நகர செயலாளர், கதிர்.செந்தில்குமார் ப.க தலைவர், தி.அன்பரசு ப.க அமைப்பாளர், கி.வீரமணி மாவட்ட மாணவர் கழகத் தலைவர், கி. செம்மொழி அரசு, க.சின்னராசு விடுதலை வாசகர் வட்ட தலைவர், கண்.இராமச்சந்திரன் நகர இளைஞர் அணி தலைவர், ம. சுந்தரம் நகர தலைவர் ப.க, நரசிம்மன் பாப்பாரப்பட்டி, மா.செல்லதுரை மாநில இளைஞரணி துணைச் செயலாளர், பெ.மாணிக்கம் மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் கலந்துக் கொண்டனர். இர.கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.