தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்

Viduthalai
1 Min Read

கந்தர்வகோட்டை, மார்ச்5- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். வானவில் மன்ற கருத்தாளர் தெய்வீக செல்வி அறிவியல் கண்காட்சிக்கு நடுவராக செயலாற்றினார். இந்நிகழ் வினை தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய செயலாளரும், பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா ஒருங்கிணைத்து தேசிய அறிவியல் தினம் குறித்து பேசினார்.

மாணவர்கள் அறிவியல் கண்காட்சியில் தங்களுடைய படைப்புகளை சமர்ப்பித்தனர். அறிவியல் பாடல்கள் ரியா மேரி நித்யசிறீ கிருஷ்டிகா தரணிகா உள்ளிட்டோர் அறிவியல் பாடலின் தலைப்பில் பாடல்கள் பாடினார்கள். சிவானி சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற தலைப்பில் ஆய்வு கட்டுரை சமர்ப்பித்தார். அறிவியல் மனப்பான்மையை வளர்க்கக்கூடிய வகையில் உறுதி மொழி அனைவரும் எடுத்துக் கொண்டனர். முன்னதாக ஆங்கில ஆசிரியர் சிந்திய, அனைவரையும் வரவேற்றார். ஆசிரியர்கள் மணி மேகலை, வெள்ளைச்சாமி, ஹில்டா உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங் கினார்கள். கல்வி வானொலியில் கலந்துகொண்டு தேசிய அறிவியல் தினம் குறித்து பேசிய மாணவர் களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *