பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேசிய அறிவியல் நாள் விழா

1 Min Read

வல்லம், மார்ச் 4- பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தேசிய அறிவியல் நாளையொட்டி வேதியியல் துறை பெரியார் புரா மற்றும் ஆற்றல் மற்றும் சுற்று சூழல் மய்யம் இணைந்து நடத்திய விவசாயிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு மேற்கொள்ள வேண்டிய விவசாய வழிமுறைகள் குறித்த பயிற்சிப் பட்டறை நிகழ்வில் பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழக நிறுவனர் வேந்தர் ஆசிரியர் கி.வீரமணி, பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர் வி.இராமச்சந்திரன், தஞ்சாவூர் விவசாய பல்கலைக்கழக மேனாள் புலமையர் பி.மோகன், தஞ்சாவூர் மாசு கட்டுப்பாடு வாரியப் பொறியாளர் டி.டி.அஜித், மற்றும் உயிர் தொழில்நுட்ப பேராசிரியர் ப.சுகுமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் அறிவு சார் மய்யத்தில் அறிவியல் ஆய்வு மேற்கொள்ளும் குழந்தை விஞ்ஞானிகள் தங்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளைக் குறித்து விளக்கினார்கள். இறுதியாக வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
(28.2.2025)

தமிழ்நாடு

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *