பிரபல பேச்சாளர், எழுத்தாளர், கருத்தாளரான திருச்சி தோழர் கவிஞர் நந்தலாலா (வயது 70) மறைந்தார் என்ற செய்தி மிகப் பெரிய அதிர்ச்சிக்குரிய செய்தியாகும். அவரது இயற்பெயர்
எஸ். நெடுஞ்செழியன் ஆகும்.
எதையும் கூர்த்த மதியுடன் ஆய்தல், நகைச்சுவைத் தேன் கலந்த உரையாடல், பேச்சு, தெளிவுமிக்க எழுத்தாற்றல் எல்லாம் அவரது தனித் தன்மையாகும்.
அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது அவரது குடும்பத்தினர், உறவினர்கள், முற்போக்கு எழுத்தாளர்கள், படைப்புலகத் தோழர்கள் அனைவருக்கும் நமது ஆறுதலும், மறைந்த தோழருக்கு நமது இரங்கலும்.
அவருக்கு நமது தோழமை மிக்க வீர வணக்கம்.
கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
4.3.2025