மணிப்பூர் கலவரம் : உச்ச நீதிமன்றம் கருத்து

2 Min Read

அரசியல்

புதுடில்லி, ஜூலை 11 மணிப்பூரில், பெரும்பான்மையினரான மெய்தி இன மக்களுக்கும், பழங்குடியின மக்களுக்கும் இடையே கடந்த மே மாதம் கலவரம் மூண்டது. சட்டம்-ஒழுங்கை நாங்கள் கையில் எடுக்க முடியாது. பாதுகாப்பை உறுதி செய்வது ஒன்றிய, மாநில அரசு களின் வேலை என்று மணிப்பூர் வழக்கில் உச்சநீதிமன்றம் கூறியது. 

வடகிழக்கு மாநிலமான மணிப் பூரில், பெரும்பான்மையினரான மெய்தி இன மக்களுக்கும், பழங்குடியின மக்களுக்கும் இடையே கடந்த மே மாதம் கலவரம் மூண்டது. சுமார் 150 பேர் பலியானார்கள். இதற்கிடையே, ‘குகி’ பழங்குடியின மக்களுக்கு ராணுவ பாதுகாப்பு அளிக்கக்கோரி, ‘மணிப்பூர் பழங் குடி கூட்டமைப்பு’ என்ற தொண்டு நிறுவனம் சார்பில் உச்சநீதிமன் றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மணிப்பூர் உயர்நீதிமன்ற பார் அசோசியேசன் உள்பட பலதரப் பில் இருந்தும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங் கிய அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த 3-ஆம் தேதி நடந்த விசா ரணையின்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வுக்காக எடுக் கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மணிப்பூர் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், நேற்று (10.7.2023) இம்மனுக்கள் மீண்டும் தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தன. மணிப்பூர் அரசு சார்பில், மக்களின் மறுவாழ்வுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதை படித்து பார்த்து, வன்முறையை முடிவுக்கு கொண்டுவர என்ன செய்யலாம் என்பது குறித்த யோசனைகளை தெரிவிக்குமாறு மனுதாரர்களின் வழக்குரைஞர்கள் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர். அதற்கு மணிப்பூர் பழங்குடியின கூட்டமைப்பு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் கான்வால்வ்ஸ், பலி எண்ணிக்கை 110 ஆக உயர்ந்து விட் டதாகவும், வன்முறை நீடிப்பதாக வும் கூறினார்.  உங்கள் கருத்துக்காக நாங்கள் சட்டம்- ஒழுங்கு பரா மரிப்பை கையில் எடுக்க முடியாது. மக்களின் பாதுகாப்பை உறுதி செய் வது ஒன்றிய, மாநில அரசுகளின் வேலை. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள்தான் அதை செய்ய வேண்டும். பாதுகாப்பை உறுதி செய்யுமாறு நாங்கள் உத்தரவுதான் போட முடியும். அதற்குத்தான் உங்கள் உதவியை கேட்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் கூறினர். 

மாநில அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மாநிலத்தில் இயல்புநிலை திரும்பி வருவதாக கூறினார். அதற்கு மனுதாரரின் வழக்குரைஞர் கான்சால்வ்ஸ், ஒவ்வொருவரும் ‘குகி’ பழங்குடியினருக்கு எதிராக உள்ளனர் என்று குற்றம் சாட் டினார். கோபம் அடைந்த நீதி பதிகள், ‘மணிப்பூரில் பதற்றத்தை தூண்டிவிட இந்த நீதிமன்றத்தை களமாக பயன்படுத்தக்கூடாது” என்று கூறி, அவரை மேற்கொண்டு பேச அனுமதிக்கவில்லை.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *