எனதிரிமங்கலம், மார்ச். 4- 272.2025 மாலை 6 மணியளவில் எனதிரி மங்கலம் மந்தக்கரை திடலில் அண்ணாகிராமம் ஒன்றிய, திரவிடர் கழகம் சார்பில் திராவிடர் கழக பொதுக்குழு தீர்மான விளக்கம் மற்றும் தமிழ் நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய மோடி அரசை கண்டித்து பொதுக்கூட்டம் ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் இரா.கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு திரா விடர் கழகக் காப்பாளர் அரங்க.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் நா.தாமோதரன், மாவட்ட தலைவர் சொ.தண்டபாணி, மாவட்ட செயலாளர் க.எழிலேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய திராவிடர் கழகச் செயலாளர் இ.இராசேந்திரன் அனைவ ரையம் வரவேற்று உரை யாற்றினார்.
கழக பேச்சாளர் புலவர் இராவணன், பகுத் தறிவாளர் கழக தோழா சா.தட்சணாமூர்த்தி ஆகியோர் உரைக்கு பின் திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் நா.தாமோதரன் சிறப்புரை ஆற்றினா.
முன்னதாக ஒன்றிய தலைவர் இரா.கந்தசாமி, ஒன்றிய செயலாளர் இ.இரசேந்திரன் ஆகியோர் வீடுகளில் திராவிடர் கழக கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டன. கூட்டம் முடிந்தபின் பள்ளி மாணவர்களுக்கு இயக்க நூல்கள் வழங்கப்பட்டன.
இக்கூட்டத்தில் விழுப் புரம் நகர கழக தோழர் சதீஷ், ச.நாத்திகன், நெய்வேலி நூலகர் கண்ணன், வடலூர் முருகன், தீனமோகன், எனதிரிமங்கலம் தி.மு.க., கிளைச் செயலாளர் டி. அன்பழகன், கழக தோழர் ப.நாகமுத்து மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
இறுதியில் கொரத்தி திராவிடர் கழகத் தோழர் தேவ.இரட்சகன் நன்றி கூறினார்.