ஜெயங்கொண்டம், மார்ச் 4- ஜெயங்கொண்டம் – அரியலூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் ஜெயங்கொண்டத்தில் 1.3.2025 ஞாயிறு மாலை 5:30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.
செந்துறை ஒன்றிய தலைவர் மு. முத்தமிழ்செல்வன் கடவுள் மறுப்புகூறினார். நிகழ்ச்சிக்கு கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமை யேற்க, மாவட்டத் தலைவர் விடுதலை. நீலமேகன் அனைவரையும் வரவேற்றார். தலைமை செயற்குழு உறுப்பினர் க சிந்தனைச் செல்வன், மாவட்ட செயலாளர் மு. கோபாலகிருஷ்ணன் காப்பாளர்கள் சி. காமராஜ், சு.மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர் .
பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் தனது உரையில் இயக்கத்தின் செயல்பாடுகள் முமுவீச்சில் நடைபெற வேண்டியதன் அவசியத்தை விளக்கியும் சிதம்பரம் பொதுக்குழுவின் தீர்மானங்களையும் அவை செயல்படுத்தப்பட வேண்டியதன் காரண காரியங்களையும்விளக்கி சிறப்புரையாற்றினார் .ஜெயங் கொண்டம் ஒன்றிய செயலாளர் ஆ.ஜெயராமன் நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
சிதம்பரத்தில் நடைபெற்ற கழகப் பொதுக்குழு தீர்மானங்களை ஏற்று சிறப்பாக செயல்படுத்துவதென தீர்மானிக்கப்படுகிறது .
மும்மொழிக் கொள்கையை புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தியை திணிக்கும் ஒன்றிய பாஜக அரசை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. கல்வி வளர்ச்சிக்கு தமிழ்நாட்டிற்கு நிதியளிக்க மறுக்கும் போக்கை ஒன்றிய அரசு மாற்றிக்கொள்ள வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது .
தொகுதி மறு சீரமைப்பு என்ற பெயரில் தென் மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சியை ஒன்றிய அரசு கைவிட வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகிறது .
அரியலூர் மாவட்டத்தில் புதிய கிளைக் கழகங்களை உருவாக்குவ தெனவும் கிளைக் கழகங்கள் தோறும் கழகக் கொடியேற்றுவதெனவும் ஒருமனதாக முடிவு செய்யப்படுகிறது.
தமிழர் தலைவரின் பெரும் முயற்சியில் உருவாகி வரும் பெரியார் உலகத்திற்கு பொதுமக்கள் மத்தியில் பெருமளவு நிதி திரட்டி அளிப்பதெனவும் இனமான ஏடான விடுதலைக்கு சந்தாக்களை திரட்டி அளிப்பது எனவும் ஒரு மனதாக தீர்மானிக்கப்படுகிறது .
புதிய பொறுப்பாளர்கள்
அரியலூர் மாவட்ட இளைஞரணி தலைவர்: லெ.தமிழரசன் செந்துறை – செயலாளர்: க. மணிகண்டன் விளாங்குடி – துணைத்தலைவர்: க. செந்தில் ஆண்டிமடம் – துணைச் செயலாளர்: ப. மதியழகன் மறவனூர். – செந்துறை ஒன்றியம் துணைத் தலைவர்கள்: சி.கருப்புசாமி சுந்தரவடிவேலு – துணைச் செயலாளர்: க. சுப்பராயன்.
பங்கேற்றோர்
பொதுக்குழு உறுப்பினர் இரத்தின ராமச்சந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் க.கார்த்திக், மாவட்ட விவசாய அணி தலைவர் மா.சங்கர், மாவட்ட விவசாய அணி செயலாளர் ஆ. இளவழகன், மாவட்ட தொழிலாளரணி தலைவர் வெ. இளவரசன், மாவட்ட தொழிலாளரணி செயலாளர் மா. கருணாநிதி , ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் இரா. தமிழரசன், ஒன்றிய செயலாளர் தியாக. முருகன்,அமைப்பாளர்
கோ. பாண்டியன், நகர செயலாளர் டி எஸ் கே அண்ணாமலை, தா.பழூர் ஒன்றிய தலைவர் சிந்தாமணி இராமச்சந்திரன் ஒன்றிய செயலாளர் பி. வெங்கடாசலம் , அமைப்பாளர் சி.தமிழ் சேகரன்,சூரிய நாராயணன், செந்துறை ஒன்றிய செயலாளர் ராசா செல்வகுமார், ரஜினிகாந்த்.சி.கருப்புசாமி, க.சுப்பராயன். மாவட்ட இளைஞரணி செயலாளர் லெ. தமிழரசன், மணப்பத்தூர் கலைமணி, அரியலூர் ஒன்றிய தலைவர் சி. சிவக்கொழுந்து, நகர செயலாளர் ஆட்டோ தர்மா ,வடலூர் இந்திரஜித் உள்ளிட்ட ஏராளமான பொறுப்பாளர்களும் தோழர்களும் பங்கேற்றனர்.