எஸ்.கே.பெருமாள் சாமி 83ஆவது பிறந்த நாளையொட்டி பெரியார் உலகிற்கு நிதி

viduthalai
1 Min Read

பெரியார் காலம் தொட்டு இன்று வரை நம் கழக பணிகளுக்கு மிகப்பெரிய அளவில் தொடர்ந்து பல்வேறு விதமான உதவிகளை செய்து இயக்கத்திற்கு உறுதுணையாக இருப்பவர். திருப்பத்தூர் மாவட்ட விடுதலை வாசகர் வட்ட துணைச் செயலாளர், பெரியார்பெருந்தொண்டர் எஸ்.கே.பெருமாள் சாமி. அவர் தன் 83ஆவது பிறந்த நாளையொட்டி (01.03.2025) பெரியார் உலகத்திற்கு ரூ. 2000அய் திருப்பத்தூர் மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசனிடம் வழங்கினார். உடன் அவர் வாழ்விணையர் இராதா. இதற்கு முன்பும் பலமுறை பெரியார் உலகிற்கு நிதி வழங்கியுள்ளார். தொடர்ந்து நிதி வழங்குவேன் என்று உறுதி கூறினார். மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் அவர்களுக்கு பெரியார் படம் வழங்கி பயனாடை அணிவிக்கப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *