வனக்காப்பாளர், வனக் காவலர் தேர்வு சான்றிதழ் பதிவேற்ற குறைபாடுகளை சரி செய்ய இறுதிவாய்ப்பு தமிழ்நாடு அரசு பணியாளர் வாரியம் அறிவிப்பு

1 Min Read

சென்னை, மார்ச் 1- குருப்-4 தேர்வில் அடங்கிய வனக்காப்பாளர், வனக் காவலர் உள்ளிட்ட பதவிகளுக்கு சான்றிதழ் பதிவேற்ற குறைபாடுகளை சரிசெய்ய டிஎன்பிஎஸ்சி இறுதி வாய்ப்பு வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அ.ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

குருப்-4 பணிகளில் அடங்கிய வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர், வனக்காவலர், (பழங்குடியின இளைஞர்) ஆகிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

அவர்களின் பதிவேற்றத்தை சரிபார்த்தபோது, சில விண்ணப்ப தாரர்கள் உரிய சான்றிதழ்களை குறைபாடாகவும், சரியாக பதிவேற்றம் செய்யாமல் இருப்பதும் கண்டறியப்பட்டது.

எனவே, அத்தகைய விண்ணப்ப தாரர்களுக்கு மட்டும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

ஓடிஆர் பதிவேற்றம்

அவர்கள் மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்ட சான்றிதழ்களை தேர்வாணையத்தின் இணைய தளத்தில் தங்களின் ஒருமுறை பதிவு (ஓடிஆர்) வாயிலாக பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு உரிய சான்றிதழ் களை பதிவேற்றம் செய்யாத விண்ணப்பதாரர்களின் கோரிக்கை மற்றும் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *