பாலியல் வன்முறை: பயில்வான் பி.ஜே.பி. எம்.பி. பிரிஜ் பூஷண் ஒலி பெருக்கியை உடைத்து செய்தியாளர்களிடம் ரகளை

Viduthalai
2 Min Read

அரசியல்


புதுடில்லி, ஜூலை 12
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும், பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது மல்யுத்த வீரர், வீராங் கனைகள் பாலியல் துன்புறுத்தல் குற்றச் சாட்டு தெரிவித்து, ஒரு மாதத்திற் கும் மேலாக டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது 2 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் ஒன்று போக்சோ பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், புகார் தெரிவித்த மைனர் பெண்ணின் தந்தை தனது வாக்குமூலத்தை மாற்றியதால், பிரிஜ் பூஷண் மீது போக்சோ பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய டில்லி காவல்துறை பரிந்துரைத்துள்ளது.

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கில் டில்லி காவல்துறை பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், டில்லி விமான நிலை யத்தில் ஒரு தனியார் தொலைக் காட்சி செய்தி சேனலின் செய்தி யாளருக்கு பிரிஜ் பூஷண் பேட்டி அளித்தார்.

அந்த பெண் செய்தியாளர் பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டு கள் மற்றும் டில்லி காவல்துறை குற்றப்பத்திரிகை தொடர்பாக கேட்டபோது, கோபமடைந்த பிரிஜ் பூஷண், “நான் உங் களிடம் எதுவும் சொல்லமுடியாது” என்று பதிலளித்து அங்கிருந்து விலகிச் சென்றார்.  அவரது பதிலில் அதிருப்தி அடைந்த பெண் செய்தி யாளர் சிங்கைத் துரத்திச் சென்று, அவரை பா.ஜ.க. இன்னும் கட்சியிலிருந்து நீக்காமல் இருப்பது குறித்து கேள்வி எழுப்பினார். 

இதனால் மேலும் எரிச்சல டைந்த பிரிஜ் பூஷண், “உங்களுக்கு வேண்டிய மசாலா பேச்சு எதுவும் என்னிடம் இல்லை” என்று காட் டமாக பதிலளித்தார். 

செய்தியாளர் தொடர்ந்து சென்று அவரிடம் பதவி விலகுவீர் களா? என்று கேட்டபோது, “நான் ஏன் பதவி விலக செய்ய வேண் டும்?” என்று கேட்டார். கோபத்தில் குரலை உயர்த்தி, “எதன் அடிப் படையில் பதவி விலக சொல்கிறாய். வாயை மூடு” என்று அதட்டினார். பின், அவர் விரைந்து சென்று தனது காரின் உள்ளே சென்று அமர்ந்து கொண்டு, கதவை வேகமாக அடைத்து செய்தியாளரின் மைக்கை உடைத் துப் போட்டார். மைக் தரையில் விழுந்து சேதம டைந்தது. 

இந்த சம்பவத்தின் முழுக் காணொலிக் காட்சியும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பல தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகளை கிளப்பியுள்ளது. 

டில்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் சுவாதி மாலிவால், இந்த காணொலிக் காட்சி சமூக ஊடகங் களில் பரவி வருவதைப் பார்த்து, பிரிஜ் பூஷணுக்கு உடனடியாக சிறைத் தண்டனை வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார். 

“இதை மீண்டும் சொல்கிறேன். பிரிஜ் பூஷண் சிங் ஒரு ரவுடி. ஒரு பெண் செய்தியாளரிடம் கேமரா முன்பே இப்படி நடந்துகொள்ளும் தைரியம் அவருக்கு இருக்கும் போது, கேமரா வெளிச்சம் இல்லாத பெண் களிடம் எப்படி நடந்து கொள்வார் என்று கற்பனை செய்து பாருங்கள்! இந்த ஆளுக்கான இடம் நாடா ளுமன்றம் அல்ல, சிறைதான்!” என்று மாலிவால் டுவீட் செய்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *