ஆவடி, பிப். 27- ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 23-02-2025 அன்று மதியம் 2 மணிக்கு ஆவடி பெரியார் மாளிகையில் ஆவடி மாவட்ட கழக துணை தலைவர் மு.ரகுபதி வரவேற்புரையுடன் மாவட்ட செயலாளர் க.இளவரசன் முன்னிலையில் மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன் தலைமையில் நடைபெற்றது.
முதலாவதாக ஆவடி மாவட்ட கழக மகளிர் பாசறை செயலாளர் அன்புச் செல்வி கடவுள் மறுப்பு கூறிய பின் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
தீர்மானங்கள்
பொதுக்குழுவில் நிறைவேற் றப்பட்ட தீர்மானங்களை நிறை வேற்ற செயல்படுவது என்றும் தீர்மானங்களை விளக்கி ஆவடி நகர கழக செயலாளர் தமிழ் மணி உரையாற்றினார்.
விடுதலை சந்தாக்களை மாவட்ட அளவில் அதிகமாக சேர்ப்பது எனவும், உண்மை வாசகர் வட்டம் மார்ச் மாதம் முதல் தொடர்ந்து நடத்தவும், மாவட்ட கழக வளர்ச்சிக்கு அனைத்து தோழர்களின் பங்களிப்போடு சிறப்பாக செயல்படுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
ஜனவரி 15 முதல் பிப்ரவரி 20 வரை பிறந்த நாள் மற்றும் திருமண நாள் கண்ட மாவட்ட கழக தோழர்களுக்கு பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்து சிறப்பு செய்யப்பட்டது.
பங்கேற்றோர்
துரை.முத்துகிருட்டிணன், திருமுல்லைவாயில் பகுதி கழக தலைவர் இரணியன் (எ) அருள் தாஸ், சுந்தர்ராஜன், ராணி ரகுபதி, அம்பத்தூர் பகுதி கழக தலைவர் பூ.இராமலிங்கம், பாசறை இரா.கோபால், பட்டாபிராம் பகுதி கழக தலைவர் வேல்முருகன், அரிகிருஷ்ணன், ஆவடி மாவட்ட கழக இளைஞரணி தலைவர் சு.வெங்கடேசன், துணை செயலாளர் சென்னகிருட்டிணன், ரா.பிரபாகரன், மு.பாலகிருஷ் ணன், எஸ்.நிஷாந்த், கோ. வெற்றிச்செல்வன், ஆவடி நகர தலைவர் கோ.முருகன், ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணை தலைவர் ஜெயராமன், கே.திவரசு, கன்னடபாளையம் சா.பெ.தமிழரசன், சு.வெற்றிச் செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக ஆவடி மாவட்ட திராவிடர் கழக தொழிலாளர் அணி தலைவர் கி.ஏழுமலை நன்றி கூறினார்.