தேனி, பிப்.27- கம்பம் மாவட்ட திராவிடர் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் நாராயண தேவன் பட்டியில் 18.2.2025 அன்று மாலை நான்குமணி அளவில் நடைபெற்றது கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் செ.தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் வி.பாஸ்கரன் வரவேற்புரையாற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் பொதுக்குழு கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஆற்றிய உரையில் தெரிவித்த திட்டங்களை செயல்படுத்த வேண்டிய அவசியத்தை குறிப்பிட்டு தொடக்கவுரையாற்றினார். கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார்செல்வன், காப்பாளர் கருப்பு சட்டை சு.நடராஜன், மாவட்ட துணைத் தலைவர் க .சிவா, மாவட்டச் செயலாளர் ப .செந்தில் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் பா.முகிலன், மாவட்ட இளைஞரணி தலைவர் முத்தமிழன், கே.கே.பட்டி கிளைச் செயலாளர் அழகேசன், ஒன்றிய செயலாளர் குமரேசன், கே.கே.பட்டி கிளை தலைவர் முருகன், என்டிபட்டி கிளைச் செயலாளர் மணிகண்டன் ,தோழர் சகாதேவன், கூடலூர் கிளை தலைவர் மனோகரன், கே.கே.பட்டி ஜெயம் மணிகண்டன் மற்றும் ஏராளமான தோழர்கள் பங்கெடுத்தனர். கூட்டத்தில் சிதம்பரம் பொதுக்குழு தீர்மானங்கள் செயல்படுத்துவது என்றும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர் வி.பாஸ்கரன், மாவட்ட துணைத் தலைவர் க.சிவா ஆகியோருக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.
அன்னை மணியம்மையார் அவர்களின் பிறந்த நாளான மார்ச் 10ஆம் தேதி கூடலூரிலும், மார்ச் 16ஆம் தேதி கேஜி பட்டியிலும் கூட்டம் நடத்துவது என்றும், வரும் மே மாதத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை கம்பம் மாவட்டம் சார்பாக நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
தொடர்ந்து ‘பெரியார் எனும் பெரும்நெருப்பு’ என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு பொதுக்குழு உறுப்பினர் வி.பாஸ்கரன் தலைமை வகித்தார். தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க.தமிழ்ச்செல்வன் ,கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார்செல்வன் இருவரும் சிறப்பாக உரையாற்றினார்கள்.
மாவட்டச்செயலாளர் ப.செந்தில் குமார் சிறப்பாக ஒருங்கிணைத்தார்.