மும்மொழிக் கொள்கை திணிப்புக்குக் கண்டனம்! பா.ஜ.க.வின் கலை, கலாச்சார பிரிவு மாநில செயலாளர் விலகல்

viduthalai
1 Min Read

சென்னை,பிப்.27- பாஜகவின் கலை, கலாச்சார பிரிவு மாநில செயலாளராக செயல்பட்டு வந்தவர் ரஞ்சனா நாச்சியார். நடிகையான இவர், கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக பாரதிய ஜனதா கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். இந்த நிலையில், பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் என்னை நான் இன்றோடு விடுவித்துக் கொள்கிறேன் என நடிகை ரஞ்சனா நாச்சியார் தெரிவித்துள்ளார்.

மும்மொழிக் கொள்கை திணிப்பு

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
“தாயகத்துடன் இணைந்த தமிழ்நாடு என்பதை எண்ணித்தான் தேசிய இயக்கத்தில் என்னை இணைத்துக் கொண்டேன். ஆனால், தாயகம் வேறு தமிழ்நாடு வேறு என்கிற மாற்றான் தாய் மனப்போக்கு என்னை இன்னமும் இங்கு இருக்க வேண்டுமா? என்கிற கேள்வியை எழுப்பியது.

என்னைப் பொறுத்தவரை தாயகம் காக்கப்பட தமிழ்நாடு சிறக்க வேண்டும், மும்மொழிக் கொள்கை திணிப்பு, திராவிடத்தின் மீதுள்ள வெறுப்பு, தொடர்ந்து புறக்கணிக்கப்படும் தமிழ்நாடு என்பதெல்லாம் ஒரு தமிழச்சியாக என்னால் ஏற்றுக்கொண்டு உங்களுடன் இயங்க முடியவில்லை.

எனவே எனக்கென்று ஒரு இயக்கம், எனக்கென்று ஒரு கழகம், பெண்களின் முன்னேற்றத்திற்கு முன்னுரிமை தரும் தலைமை, இனி இதுவே என் கடமை என்கிற பயணத்தை நோக்கி பயணிக்கத் துவங்கி விட்டேன், எனக்கு இதுவரை வாய்ப்பளித்தவர்களுக்கும் பதவியை வாரி தந்தவர்களுக்கும், என் வளர்ச்சிக்கும் என் முயற்சிக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளித்து அனுசரித்து சென்றவர்களுக்கும் நான் என்றென்றும் கடமைப்ப ட்டிருக்கிறேன், நன்றியை நவில்கிறேன்.” இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *