விருதுநகர் சி.பி.அய். பொறுப்பாளரும், சீரிய பகுத்தறிவாளருமான தோழர் கே.எஸ்.காதர்முகையதீன் – சபியா இணையரது பேத்தியும், கா.முபாரக் – தில்ஷாத் இணை யரது மகளுமான கா.மு.நேசத், சென்னை அல்லாபிச்சை – பரக்கத் இணையரது மகன் அ.முகம்மது இக்பால் இவர்களது மணவிழா 9.7.2023 ஞாயிறு காலை 11 மணியளவில், விருதுநகர் முஸ்லிம் பள்ளி வாசல் ஜமாஅத் கல்வி வளாக அரங்கில், சி.பி.அய். மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில், முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் கே.எம்.காதர்மொய்தீன் முன்னிலையில் நடைபெற்றது. சி.பி.அய். மாவட்டச் செயலாளர் மொ.லிங்கம், மேனாள் மாவட்டச் செயலாளர் இராமசாமி, திராவிடர் கழக தலைமைக் கழக அமைப்பாளர் இல.திருப்பதி, மாவட்ட தலைவர் கா.நல்லதம்பி, செயலாளர் விடுதலை தி.ஆதவன், மாவட்ட ப.க. தலைவர் பெ.த.சண் முகசுந்தரம், மகளிரணி அமைப்பாளர் பொன்மேனி ராஜயோகம் மற்றும் அனைத் துக் கட்சிப் பொறுப்பாளர்கள், தோழர்கள், உற்றார் உறவினர் நண்பர்கள் பெருமளவில் பங்கேற்றுச் சிறப்பித்தனர். மணவிழா மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்ல நிதி ரூ.2000 இரண்டாயிரம் நன்கொடை வழங்கினர். வாழ்த்துகள்! நன்றி!!
நன்கொடை
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books