சென்னையில் பல இடங்களில் மும்மொழி கொள்கைக்கு எதிராக மாணவர் இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்

1 Min Read

சென்னை,பிப்.26- மும்மொழி கொள்கைக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று (25.2.2025) ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. மாவட்டத் தலைநகரங்களில் ஒன்றிய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டும், பேரணி நடத்தியும் மாணவர் அமைப்புகள் கண்டனங்கள் தெரிவித்தன.
இதன் ஒருபகுதியாக சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு திமுக மாணவரணி மாநில துணைச் செயலாளர் அமுதரசன் தலைமை தாங்கினார். இதில் இந்திய மாணவர் சங்கம், மதிமுக மாணவரணி, திராவிட மாணவர் கழகம், சமூக நீதி மாணவர் இயக்கம், முற்போக்கு மாணவர் கழகம் உள்ளிட்ட அமைப்பினர் பங்கேற்று மும்மொழிக் கொள்கையை திணிக்கக் கூடாது, ஒன்றிய அரசு நிதி வழங்க வேண்டும் என முழக்கமிட்டனர்.
முன்னதாக சைதாப்பேட்டையில் பஜார் சாலை, ஜோன்ஸ் சாலை வழியாக பேரணியாக சென்ற மாணவ அமைப்பினர், துணை அஞ்சல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அடையாறு பிஎஸ்என்எல் அலுவலகம், திருவொற்றியூர் அஞ்சல் நிலையம், தண்டையார்பேட்டை அஞ்சல் நிலையம் அருகிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *